தொடர்ந்து வெல்லும் ஈரான்

அகமதாபாத்: இந்தியாவின் அகமதாபாத் நகரில் நடைபெற்று வரும் உலகக் கிண்ணக் கபடிப் போட்டியில் ஈரான் அதன் மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது. 'பி' பிரிவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கென்யா அணியுடன் ஈரான் மோதியது. இதில் ஈரான் 33-28 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது. ஈரானின் மின்னல் வேக ஆட்டத்துக்கு ஈடுகொடுத்து ஆடப் பெரிதும் முயற்சி செய்தனர் கென்ய வீரர்கள்.

கடுமையான போட்டி நிலவி யதில் கண் சிமிட்டும் நேரத்தில் எதுவும் நடக்கலாம் என்ற நிலை ஏற்பட்டது. கென்ய வீரர்களின் முயற்சிகளை நிதானமாக எதிர்கொண்ட ஈரான் குழு, வெற்றியைத் தனக்குச் சொந்தமாக்கிக் கொண்டது. ஈரான் அணி ஏற்கெனவே 52-15 என்ற கணக்கில் அமெரிக் காவையும் 62-43 என்ற கணக்கில் தாய்லாந்தையும் வீழ்த்தி இருந்தது. இதன் மூலம் 15 புள்ளிகளுடன் அந்த அணி முதல் இடத்தில் இருக்கிறது. 'ஏ' பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 68-45 என்ற கணக்கில் அர்ஜெண்டினாவை வீழ்த்தியது. இது ஆஸ்திரேலியா பெற்ற முதல் வெற்றியாகும்.

தம்மைச் சுற்றி வளைத்து மடக்கிப் பிடிக்க முயலும் கென்ய வீரர்களிடமிருந்து தப்பிக்க குதிக்கும் ஈரானிய வீரர். ஈரானிய வீரர்கள் தங்கள் அபாரத் திறனை வெளிப்படுத்தி புள்ளிகளைக் குவித்தனர். படம்: இணையம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!