ராஜ்கோட்: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறமுடியாமல் போனது மிகுந்த ஏமாற்றத்தைத் தந்திருப்பதாக இங்கிலாந்து அணித் தலைவர் அலிஸ்டர் குக் தெரிவித்துள்ளார். ராஜ்கோட்டில் இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிந்தது.
இங்கிலாந்து அணி சிறப்பாக பந்தடித்து ஓட்டங்களைச் சேர்த்தும் இந்திய அணி தோல்வியின் பிடியிலிருந்து தப்பியது. அதன் அணித் தலைவர் விராத் கோஹ்லியின் சிறப்பான ஆட்டத்தால் போட்டி சமநிலையில் முடிந்தது. இங்கிலாந்து அதன் முதல் இன்னிங்சில் 537 ஓட்டங்களும் இந்தியா முதல் இன்னிங்சில் 488 ஓட்டங்களும் குவித்தன. இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 260 ஓட்டங்கள் எடுத்து இங்கிலாந்து 'டிக்ளேர்' செய்தது.