ஹேமில்டன்: நியூசிலாந்து மண்ணில் முதன்முறையாக டி20 தொடரைக் கைப்பற்றி சாதிக்கும் முனைப்புடன் அவ்வணிக்கு எதிராக இன்று நடக்கவிருக்கும் மூன் றாவது டி20 போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி களமிறங்கவுள்ளது.
இந்திய அணியைப் பொறுத்தமட்டில் கடந்த மூன்று மாத காலமும் மறக்க முடியாத தருணமாகிவிட்டது. ஆஸ்திரேலியாவில் முதன்முறையாக டெஸ்ட் தொட ரையும் இருதரப்பு ஒருநாள் தொடரையும் வென்ற இந்திய அணி, அதன்பின் நியூசிலாந்தில் நடந்த ஒருநாள் தொடரையும் ஆகப் பெரிய வித்தியாசத்தில் கைப்பற்றி யது.
இந்த நிலையில், இன்றைய ஆட்டத்தில் வென்று டி20 தொடரையும் இந்திய அணி தன்வசமாக்கும் பட்சத்தில் அது பழம் நழுவிப் பாலில் விழுந்ததுபோல் ஆகி விடும்.
முதல் டி20 போட்டியில் மரண அடி வாங்கியபோதும் இரண்டாவது ஆட்டத்தில் இந்திய வீரர்கள் எழுச்சியுடன் ஆட, தொடர் 1-=1 எனச் சமனுக்கு வந்தது.
முதல் இரு போட்டிகளில் விளையாடிய அதே பதினொருவரையே இந்திய அணி இன்றும் களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு வேளை அணியில் ஏதேனும் மாற்றம் செய்ய நிர்வாகம் நினைத்தால், யுஸ்வேந்திர சகலுக்குப் பதிலாக குல்தீப் யாதவ் சேர்க்கப்படலாம்.
கடந்த ஆட்டத்தில் அரை சதம் அடித்ததோடு அனைத்துலக டி20 போட்டிகளில் அதிக ஓட்டங்களைக் குவித்தோர் பட்டியலில் முதலிடத் தையும் எட்டினார் இந்திய அணியின் தற்காலிகத் தலைவரான ரோகித் சர்மா. இன்னொரு தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவானுடன் இணைந்து இன்றைய ஆட்டத்திலும் அவர் நல்லதோர் அடித்தளத்தை அமைத்துத் தந்தாலே பாதிக் கிணறு தாண்டியது போலத்தான்.
அதே வேளையில், இந்திய அணிப் பந்துவீச்சாளர்களும் இரண்டாவது ஆட்டத்தில் இருந்ததைப் போன்ற செயல்பாட்டை இன்றும் வெளிப் படுத்த வேண்டியது அவசி யம்.
ஏனெனில், நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கோலின் மன்ரோவும் டிம் சைஃபெர்ட்டும் அதிரடி ஆட்டத்திற்குப் பெயர்போனவர்கள்.
ஒருநாள் போட்டித் தொடரை இழந்துவிட்ட நிலையில், டி20 தொடரை ஏனும் வென்று ரசிகர்களின் நம்பிக்கையைத் தக்கவைக்க வேண்டிய இக்கட்டில் நியூசிலாந்து இருக்கிறது.
அதற்கு நடுவரிசைப் பந்தடிப்பாளர்களும் கைகொடுக்க வேண்டும் என அந்த அணி நிர்வாகம் எதிர்பார்க்கிறது.
முதல் இரு போட்டிகளில் அதிக ஓட்டங்களை விட்டுக் கொடுத்த நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்காட் கஹலைனுக்குப் பதிலாக பிளேர் டிக்னர் அல்லது டக் பிரேஸ்வெல் சேர்க்கப்படலாம் எனத் தெரிகிறது.
சிங்கப்பூர் நேரப்படி இன்று பிற்பகல் 3 மணிக்குப் போட்டி தொடங்கும்.
இன்னொரு தொடருக்கு இலக்கு
10 Feb 2019 04:28

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

புதுப்பொலிவுடன் காட்சிதருகிறது தேக்கா நிலையம். புதுப்பிப்புப் பணிகளுக்குப் பின் முதல் தளம் இன்று திறப்பு.

உயரும் மின்சாரம், எரிவாயுக் கட்டணங்கள்.

பத்தில் ஒன்பது சிங்கப்பூரர்கள் அதிக அளவு உப்பு உட்கொள்கிறார்கள்

'புரோஜெக்ட் எனிக்மா' ஆஹா கார்னர் புதிர்ச்சாவடி

இரண்டாம் உலகப் போர்க்கால வெடிகுண்டு வெற்றிகரமாக வெடிக்கச் செய்யப்பட்டது

தயாராகி வரும் தீபாவளி கொண்டாட்டங்கள் 2023

வெளிநாட்டு ஊழியரின் திருமணத்தில் முதலாளிக்குத் தடபுடல் வரவேற்பு

திரு லீ குவான் இயூவின் நீண்டகால மெய்க்காவலர் கருப்பையா கந்தசாமி.

வங்கி வைப்புத்தொகைக்கான காப்புறுதி வரம்பு அடுத்த ஆண்டிலிருந்து உயர்த்தப்படும்

கனடா நாட்டினருக்கு விசா இல்லை: இந்தியா தற்காலிகமாக நிறுத்தம்

இரண்டு வயசு மகளை கொன்ற ஆடவருக்கு 21.5 ஆண்டுகள் சிறை தண்டனை

பேருந்து, ரயில் சேவைகளுக்கான பயணக் கட்டணம் பெரியவர்களுக்கு 11 காசு உயர்வு

நல்லாசிரியர் விருது 2023ல் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற மூத்த தமிழ் ஆசிரியர்கள்.

இவ்வாண்டின் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சிங்கப்பூர் கிராண்ட் பிரீ வெற்றியாளர் பட்டத்தை ‘ஃபெராரி’ குழுவின் கார்லோஸ் செயின்ஸ் ஜூனியர் கைப்பற்றினார்.

விடியலுக்கான விளக்கொளியாய் வழிகாட்டும் நல்லாசிரியர்களுக்கு விருது

லீ குவான் இயூவின் 100வது பிறந்தநாளையொட்டி தமிழ் முரசின் சிறப்புக் காணொளித் தொகுப்பு (பாகம் 3)

லீ குவான் இயூவின் 100வது பிறந்தநாளையொட்டி தமிழ் முரசின் சிறப்புக் காணொளித் தொகுப்பு (பாகம் 2)

லீ குவான் இயூவின் 100வது பிறந்தநாளையொட்டி தமிழ் முரசின் சிறப்புக் காணொளித் தொகுப்பு (பாகம் 1)

திரு லீ குவான் இயூ கண்காட்சி

நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த தேர்திருவிழா.

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!