காற்பந்து: சிங்கப்பூரை வென்ற தென்கொரியா

சோல்: உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிக்கான தகுதிச் சுற்று ஆட்டத்தில் சிங்கப்பூரை 5-0 எனும் கோல் கணக்கில் வீழ்த்தியது தென்கொரியா.

முற்பாதியின் பெரும்பகுதிக்கு கோல் ஏதும் விட்டுக்கொடுக்காமல் இருந்தது சிங்கப்பூர். எனினும், 44வது நிமிடத்தில் முதல் கோல் விழுந்த பிறகு கோல் மழை பொழியத் தொடங்கியது.

முதல் கோலைப் போட்டார் சோ குவே-சுங். 49வது நிமிடத்தில் கோல் எண்ணிக்கையை இரண்டாக்கினார் ஹுவாங் ஹீ-சான்.

63வது நிமிடத்தில் தென்கொரிய அணித் தலைவரும் டாட்டன்ஹம் ஹாட்ஸ்பர் நட்சத்திரமுமான சொன் ஹியோங்-மின் தென்கொரியாவின் மூன்றாவது கோலைப் போட்டார். அவரின் கோல்தான் ஆகச் சிறப்பானதாக அமைந்தது.

68வது ஹுவாங் உய்-ஜோ பெனால்டி வாய்ப்பை கோலாக்கினார். 85வது நிமிடத்தில் தென்கொரியாவின் ஐந்தாவது கோலைப் போட்டார் லீ காங்-இன்.

இந்த ஆட்டம் 2026 உலகக் கிண்ணப் போட்டி மட்டுமின்றி 2027ஆம் ஆண்டு ஆசிய கிண்ணப் போட்டிக்கான தகுதியாட்டமும்கூட.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!