கிரிக்கெட்: ‘ஆக மோசமான முடிவு’ என ரசிகர்கள் கொந்தளிப்பு

மிர்பூர்: ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி, மூன்று ஒருநாள் போட்டிகளிலும் மூன்று டி20 போட்டிகளிலும் விளையாடுவதற்காக பங்ளாதேஷ் சென்றுள்ளது.

டேவிட் மலான் சதமடிக்க, முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து வென்றது. இந்நிலையில், நேற்று (03-03-2023) நடந்த இரண்டாவது போட்டியில் ஜேசன் ராய் சதம் விளாச, இங்கிலாந்து அணி 132 ஓட்ட வித்தியாசத்தில் வென்று, தொடரைக் கைப்பற்றியது.

இந்நிலையில், இரண்டாவது போட்டியின்போது ‘டிஆர்எஸ்’ எனப்படும் நடுவர் தீர்ப்பு மறுஆய்வு வாய்ப்பை பங்ளாதேஷ் அணித்தலைவர் தமீம் இக்பால் கையாண்டவிதம் கேலிக்கு உள்ளாகி இருக்கிறது.

இங்கிலாந்து அணி முதலில் பந்தடித்தபோது 48வது ஓவரை வீசினார் தஸ்கின் அகமது. இங்கிலாந்தின் அடில் ரஷீத் மட்டையால் பந்தை முழுவதுமாகத் தடுத்தாடினார்.

ஆனால், பந்து காலில் பட்டதாக நினைத்து, ‘எல்பிடபிள்யூ’ முறையில் அவர் ஆட்டமிழந்ததாக அறிவிக்கும்படி பங்ளாதேஷ் வீரர்கள் நடுவரிடம் முறையிட்டனர். ஆனால், நடுவர் அதனை ஏற்கவில்லை.

இதனைத் தொடர்ந்து, நடுவரின் தீர்ப்பை எதிர்த்து தமீம் ‘டிஆர்எஸ்’ முறையை நாடினார். ஆனால், பந்துக்கும் காலுக்கும் கிட்டத்தட்ட ஆறு அங்குல இடைவெளி இருப்பது மறுஒளிபரப்பில் தெளிவாகத் தெரிந்தது.

தமீமின் இந்த முடிவை ‘ஆக மோசமான மறுஆய்வு’ என இணையவாசிகள் சாடி வருகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!