வாணியம்பாடி: கள்ளச் சாராயம், கஞ்சா வியாபாரத்தை குடும்பத் தொழிலாக செய்துவந்துள்ள மகேஸ்வரி என்ற பெண், அவரது வீட்டில் சோதனை நடத்த வந்த பெண் போலிசாரை தூக்கிப் போட்டு பந்தாடி அவரது கையை முறித்துள்ளார்.
இதையடுத்து கார், புல்லட், ஸ்கூட்டர் என வாணியம்பாடியில் ஒரு குட்டி தாதா போல வலம் வந்த கஞ்சா வியாபாரி மகேஸ்வரி யையும் அவரது கணவர் உள்ளிட்ட 7 பேரையும் துப்பாக்கி முனையில் போலிசார் கைது செய்தனர்.
மகேஸ்வரியின் வீட்டிற்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 21 கிலோ கஞ்சாவையும் பானைகளுக்குள் கட்டுக்கட்டாக ஒளித்து வைத்தி ருந்த ரூ.20 லட்சம் பணம், சில்லரைக் காசு மூட்டைகளையும் போலிசார் பறிமுதல் செய்தனர்.
இவர் ஏற்கெனவே வடிவேலு பட நகைச்சுவை காட்சிகளின் பாணியில் வாணியம்பாடியில் பல வருடங்களுக்கு முன்பு தனியாக சிக்கிய காவல் அதிகாரி ஒருவரை ரத்தம் சொட்ட சொட்ட கடித்துவிட்டு அவரை வீட்டிற்குள் வைத்து பூட்டிச்சென்றவர் என்றும் கூறப்படுகிறது.
வாணியம்பாடி பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக வந்த தக வலை அடுத்து, அங்கு சோதனை நடத்தச்சென்ற தனிப்படை போலி சாரை தனது குடும்பத்தினருடன் சேர்ந்து தாக்கிய மகேஸ்வரி, அவரை மடக்கிப் பிடிக்க முயன்ற சூர்யா என்ற போலிசின் கையையும் முறித்து தூக்கி வீசியுள்ளார்.
கஞ்சா விற்பனை மூலம் ஒருவர் சம்பாதித்த சொத்துகள் அனைத்தையும் அரசு கையகப்படுத்த முழு அதிகாரம் உள்ளதால் மகேஸ்வரியின் பெயரில் உள்ள 40 வீட்டுப் பத்திரங்களை போலிசார் கைப்பற்றி உள்ளதாகவும் மற்ற சொத்துகள் குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் திருப்பத்தூர் மாவட்ட காவல் அதிகாரி விஜயகுமார் தெரிவித்துள்ளார்.