சென்னை: கொரோனா கிருமித் தடுப்பு நடவடிக்கையில் இந்தியாவிலேயே சிறப்பான முறையில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவில் கொரோனா பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. இந்தவகையில் நாள்தோறும் சுமார் 13,000 பரிசோதனைகள் நடை பெறுவதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா கிருமித் தொற்று இன்னும் சமூகத் தொற்றாக மாறவில்லை. குறிப்பிட்ட பகுதிகளில்தான் நோய்த்தொற்று அதிகம் உள்ளது என்று மேலும் கூறியவர், மத்திய அரசு படிப்படியாக நிதியை விடுவித்து வருகிறது. எனினும் கேட்ட அளவுக்கு நிதி கிடைக்காததால் நிதிச் சுமையை சமாளித்து வருவதாகக் கூறினார்.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்ட பழனிசாமி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் அடுத்தடுத்து எடுக்க வேண்டிய தொடர் நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பழனிசாமி கூறுகையில், “அரசின் வழிமுறையை மாவட்ட நிர்வாகம் முறையாகப் பின்பற்றியதால் கொரோனா இல்லாத மாவட்டமாக சேலம் மாறியுள்ளது.
“சேலம் மாவட்டத்தில் 14,003 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, 35 பேருக்கு உறுதி செய்யப்பட்டது. அவர்கள் சிகிச் சைக்கு பிறகு வீடு திரும்பி விட்ட னர்,” என்று குறிப்பிட்டார்.
தமிழகத்தில் 67 கொரோனா பரிசோதனை நிலையங்கள் மூலம் நாள்தோறும் 13,000 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன.
கோடைக்காலம் என்பதால் குடிநீர்ப் பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரு கின்றன என்றும் அவர் கூறினார்.
தமிழகத்தில்
14,853 பேர் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் கிருமிப் பரவல் சமூகத் தொற்று ஆகாமல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.