விஜயபாஸ்கர்: களத்தில் இருப்பவர்களை எதிர்க்கட்சியினர் ஊக்குவிக்க வேண்டும்

விஜயபாஸ்கர்: களத்தில் இருப்பவர்களை எதிர்க்கட்சியினர் ஊக்குவிக்க வேண்டும்

1 mins read
27e541e8-7142-4c59-8895-2fe168bcdba0
தமிழ் நாடு நல்­வாழ்­வுத் துறை அமைச்­சர் விஜ­ய­பாஸ்­கர் படம்: ஊடகம் -

சென்னை: தமி­ழ­கத்­தில் கொரோனா பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்த அரசு போர்க்­கால அடிப்­ப­டை­யில் நடவடிக்கை­களை மேற்­கொண்டு வரு­வ­தாக மக்­கள் நல்­வாழ்­வுத் துறை அமைச்­சர் விஜ­ய­பாஸ்­கர் தெரி­வித்­துள்­ளார்.

புதுக்­கோட்­டை­யில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அவர், எதிர்க்­கட்­சித் தலை­வர்­கள் அர­சின் செயல்­பாட்டை விமர்­ச­னம் செய்­வ­தைத் தவிர்த்து களத்­தில் பணி­பு­ரி­வோரை ஊக்­கு­விக்க வேண்­டும் என வலி­யு­றுத்­தி­னார்.

"நோயை வைத்து யாரும் அர­சி­யல் செய்­யக் கூடாது. அனைவரையும் ஊக்­கு­விக்­கும் வகை­யில் எதிர்க்­கட்­சி­யி­னர் தங்­க­ளது கருத்­து­க­ளைப் பதிவு செய்ய வேண்­டும். இறப்பு விகி­தத்தை மறைக்க வேண்­டிய அவ­சி­யம் அர­சுக்கு இல்லை. வெளிப்­ப­டைத் தன்­மை­யோ­டு­தான் அரசு செயல்­பட்டு வரு­கிறது," என்­றார் அமைச்­சர் விஜ­ய­பாஸ்­கர்.

கொரோனா கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்ட அதி­முக எம்­எல்ஏ நல­மு­டன் இருப்­ப­தாக குறிப்­பிட்ட அவர், எத்­த­கைய சூழ­லை­யும் எதிர்­கொள்­ளும் வகை­யில் தமி­ழக அரசு உரிய நட­வ­டிக்கைகளை மேற்­கொண்டு வரு­வ­தா­கத் தெரி­வித்­தார்.