சென்னை: அண்மையில் வெளியான மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு கூட்டணி கட்சிகளான காங்கிரசும் திமுகவும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும் நடிகையுமான குஷ்பு, பாஜகவின் புதிய கல்விக் கொள்கையை வரவேற்பதாக டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பைக் கூட்டியுள்ளது.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள குஷ்பு “தலைமை என்ன சொல்கிறதோ அதற்கெல்லாம் ‘ஆமாம் சாமி’ போட்டு, தலையாட்டும் தொண்டனாக ஒருபோதும் தான் இருக்க விரும்பவில்லை என்றும் சுதந்திரமாக எனது கருத்துகளைத் தெரிவிப்பேன்,” என்றும் கூறியுள்ளார்.
புதிய கல்விக் கொள்கை குறித்த அணுகுமுறையில், ராகுல் காந்தியின் கருத்தில் இருந்தும் காங்கிரஸ் கட்சியின் கருத்துகளில் இருந்தும் தான் வேறுபடுவதாகவும் இந்த புதிய கல்விக் கொள்கை உண்மையிலேயே சிறப்பாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், குஷ்புவின் டுவிட்டர் பக்கத்தில் குஷ்புவிடம் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதில் ஒருவர் திமுகவிலிருந்து காங்கிரசுக்கு தாவினீர்கள், இப் போது அங்கிருந்து பாஜக பக்கமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்குப் பதிலளித்துள்ள குஷ்பு, உங்களுக்கு ஏதாவது நல்லது செய்வதாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன், இதில் தவறில்லையே என கூறியுள்ளார்.
இந்நிலையில், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
“காங்கிரசில் கருத்து கூற சுதந்திரம் உள்ளது. கட்சியின் அமைப்புக்குள் பேசினால் அதற்கு வரவேற்பு உண்டு. வெளியில் வரம்பு மீறி பேசினால் அதற்கு முதிர்ச்சி இன்ைம என்றே பெயர்,” என டுவிட்டர் பதிவில் ேக.எஸ்.அழகிரி மேற்கோள் காட்டியுள்ளார்.
ஏற்கெனவே குஷ்பு பாஜகவில் சேர இருப்பதாக வதந்திகள் பரவின. அதனை உறுதி செய்வது போல், இப்போது புதிய கல்வித் திட்டத்திற்கு அவர் ஆதரவு தெரிவித்து டுவிட் பதிவிட்டுள்ளதால் சர்ச்சை வெடித்து வருகிறது.
காங்கிரசில் கருத்து சுதந்திரம் உள்ளது. கட்சிக்குள் பேசினால் அதற்கு வரவேற்பு உண்டு. வெளியில் வரம்பு மீறி புறம் கூறுவது முதிர்ச்சி இன்மையையே காட்டுகிறது.