ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தவுடன் அவரிடம் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்துவோம். அவர் விரும்பினால் அவருடன் கூட்டணி வைக்க பாஜக தயாராகவே உள்ளது என்று அக்கட்சியின் தமிழகத் தலைவர் எல். முருகன் ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக தனித்து நின்றாலும் 60 தொகுதிகளிலும் வெற்றிபெறும் என்றும் விரைவில் செயிண்ட் கோட்டையிலும் பாஜகவின் காவிக் கொடி பறக்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.
இதற்கிடையே, “மத்திய அரசின் வேளாண் மசோதாக்களை எதிா்ப்பவா்கள் இடைத்தரகா்கள். அவர்கள் பெருமுதலாளிகளுக்கு துணை போகிறாா்கள்,” என்று குற்றஞ்சாட்டியுள்ளாா்.
மத்திய அரசின் மூன்று மசோதாக்களுமே, விவசாய கட்டமைப்புகளைப் பெருக்குவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகின்றன. இதன்மூலம் விளைபொருள்களுக்கு லாபகரமான விலை பெறமுடியும்.
ஆனால், பாஜக அரசு எந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தாலும் அதை எதிா்க்கவேண்டும் என்ற முடிவில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் இருக்கிறாா். அதையேதான் இந்த விவகாரத்திலும் அவா் செய்கிறாா். இது கண்டிக்கத்தக்கது.
மசோதாக்களை எதிா்ப்பதன் மூலம், தமிழகத்தில் திமுக கொண்டு வந்ததாகச் சொல்லப்பட்ட உழவா் சந்தை திட்டத்தை அவரே எதிா்க்கிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.
தமிழக நலனில் அக்கறை காட்டுவதாகச் சொல்லிக்கொண்டு மாநிலத்துக்கு துரோகம் செய்யும் நிலைப்பாட்டை எதிா்க்கட்சிகள் மாற்றிக்கொள்வது நல்லது என்றும் எல்.முருகன் தெரிவித்துள்ளாா்.