தமிழக சட்டமன்றத் தேர்தல் எப்ரல் 6ஆம் தேதி என அறிவிக்கப்பட்டதுமே தேர்தல் நடத்தை விதிகள் நடப்புக்கு வந்துவிட்டன. தமிழகம் முழுவதும் வாகனச் சோதனையில் பறக்கும் படையினர் உடடினயாக அமர்த்தப்பட்டனர். முதல் நாளிலேயே தேர்தல் நடத்தை விதிமீறலை அவர்கள் முறிடித்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம் வாரணவாசி அருகேயுள்ள சமத்துவபுரத்தில் நேற்று காலை தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சென்னை கும்மிடிப்பூண்டியிலிருந்து தஞ்சை நோக்கி இரண்டு லாரிகள் வந்தன. ஒரு லாரியை அதிகாரிகள் நிறுத்தியபோது, அட்டைப்பெட்டி மட்டும் இருப்பதாக லாரியில் இருந்தவர்கள் கூறினர். தொடர்ந்து அங்கிருந்து அந்த லாரி வேகமாகக் கிளம்பிச் சென்றுவிட்டது.
சற்று நேரம் கழித்து வந்த மற்றொரு லாரியை பறக்கும் படை போலிசார் வழிமறித்து சோதனை மேற்கொண்டனர். அதில் குக்கர் கள் இருப்பதும் தஞ்சை மாவட்ட அமமுகவினர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா என குறிப்பிடப்பட்டு ஜெயலலிதா, டிடிவி தினகரன் பட ‘ஸ்டிக்கர்’ குக்கர்களில் ஒட்டப்பட்டிருப்பதும் தெரிய வந்தது.
இதைக் கண்டதும் தேர்தல் பறக்கும் படையினர் திருமானூர் கொள்ளிடம் பாலம் சோதனை சாவ டிக்குத் தொடர்புகொண்டு முதலில் சென்ற லாரியை பறிமுதல் செய்ய உத்தரவிட்டனர். தொடர்ந்து இரு லாரிகளையும் பிடித்து அரியலூர் கோட்டாட்சியர் அலுவலகத்திற்குக் கொண்டு சென்று முழுமையாக சோதனையிட்டனர். இரண்டு லாரி
களிலும் ரூ.12 லட்சம் மதிப்பிலான 3 லிட்டர் குக்கர்கள் இருந்தது தெரிய வந்தது. 220 அட்டைப் பெட்டிகளில் இருந்த 3,520 குக்கர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்த மாநில அமமுக வழக் கறிஞர் பிரிவு செயலாளர் வேலு கார்த்திகேயன், “எங்களிடம் சரி யான ஆவணங்கள் உள்ளன.
“தேர்தலுக்காகப் பரிசுப்பொருட்கள் கொடுக்கவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை,” என்றார்.