ராமேஸ்வரம்: தனுஷ்கோடி கடற்கரையில் கரை ஒதுங்கிய பிளாஸ்டிக் போத்தலில் பயன்படுத்தாமல் இருந்த ஏழு துப்பாக்கித் தோட்டாக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தனுஷ்கோடி பழைய தேவாலயம் கடற்கரையோரம் மீனவர் ஒருவர் கரை ஒதுங்கிய கழிவுகளை சேகரித்துக்கொண்டிருந்தார். அப்போது, மிதந்துகொண்டிருந்த போத்தலை எடுத்து திறந்து பார்த்தபோது அதில் ஏழு துப்பாக்கித் தோட்டாக்கள் இருந்தன. இதையடுத்து மத்திய உளவுத்துறை அதிகாரிகள், ஏழு தோட்டாக்களையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். படம்: ஊடகம்