சென்னை: உலக நாடுகள் அங் கம் வகிக்கும் ஜி-20 மாநாட்டுக்கு இம்முறை இந்தியா தலைமை ஏற்றுள்ளது. இந்த மாநாட்டின் ஓர் அங்கமாக, சென்னையில் ஜி-20 கல்வியாளர்கள் மாநாடு நேற்று தொடங்கியது.
மூன்று நாள்களுக்கு நடைபெற உள்ள இம்மாநாட்டில் ஜி-20 அமைப்பில் உள்ள 20 நாடுகளில் 16க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்று தங்கள் நாட்டுக் கல்விக் கொள்கைகள் குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொள்ள உள்ளனர்.
சென்னை ஐஐடி ஆராய்ச்சிப் பூங்கா வளாகத்தில் “கல்வியில் மின்னிலக்கத் தொழில்நுட்பத்தின் பங்கு’’ என்ற தலைப்பில் கருத் தரங்கம் நடைபெற்றது.
இதில், மாநிலம் முழுவதும் இருந்து 200 மாணவர்களும் சென்னை ஐஐடியில் பயிலும் 100 மாணவர்களும் கலந்துகொண்ட னர்.
நாட்டின் கல்வி வளர்ச்சி குறித்தும் படிப்பை பாதியோடு நிறுத்திவிடுவதைக் குறைப்பது குறித்தும் இந்த மூன்று நாள் மாநாட்டில் ஆலோசனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் கள் தெரிவிக்கின்றன.
ஜி-20 கல்வியாளர்கள் மாநாட்டில் சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியபோது, “ஆஸ்திரேலியா, சீனா, நெதர்லாந்து ஆகிய நாடுகள் ‘டிஜிட்டல்’ கல்வியில் சிறந்து விளங்குகின்றன.
“பிரான்ஸ் நாட்டில் ஆங்கிலம் வழி பாடங்களைப் போதித்தாலும் பிரான்ஸ் மொழி பெயர்ப்புக் கருவிகளும் பயன்படுத்தப்படுகின்றன. இதற்காக அந்நாடு பெரும் தொகையை செலவழித்து வருகிறது,” எனக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், சீனா, நெதர்லாந்து, பிரான்ஸ், ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் மெய்நிகர் வகுப்பறைகளை அதிக அளவில் உருவாக்கி வருவதாகவும் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக அந்த நாடுகளில் அனைவருக்கும் கல்வி தங்கு தடை இன்றி வழங்கப்படுவதாக வும் கூறினார்.
“தென்ஆப்பிரிக்கா, மொரி சியஸ் போன்ற நாடுகளும் தங்க ளது கல்விக் கட்டமைப்புகளை மேம்படுத்த தீவிரம் காட்டி வருகின்றன.
“20,000க்கும் அதிகமான உயர்கல்வி பாடத்திட்டங்களைக் கொண்டுள்ள சீனா, உயர் கல்வி படிக்கும் தளமாக மாறி வருகிறது.
“அதேபோல், நெதர்லாந்து மென்பொருள் கல்விக்கு அதிக முக்கியத்துவம் தந்து வருகிறது.
“பல்வேறு உயர் கல்வி நிறு வனங்களை உருவாக்கி வரும் இந்தியா, தொழில்நுட்பக் கல்வி மையமாகவும் மாறி உள்ளது.
“புதிய கல்விக் கொள்கை மூலம் அனைவருக்கும் சமமான, தரமான கல்வியை இந்தியா கொடுத்து வருகிறது,’’ என்றார்.
இதனிடையே, கல்வியாளர்கள் மாநாட்டை ஒட்டி, சென்னையில் ஆளில்லா வானூர்திகள் எதுவும் மூன்று நாள்களுக்கு பறக்கக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.