சென்னை: தமிழகத் தலைநகர் சென்னையின் அனைத்துலக விமான நிலையத்தில் அமைக்கப்பட்டிருக்கும் புதிய ஒருங்கிணைக்கப்பட்ட முனையத்தில் கூடுதல் விமானச் சேவைகள் இயங்கவுள்ளன.
எத்தியோப்பியா, குவைத் உள்ளிட்ட நாடுகளுக்கு வழங்கப்படும் சேவைகள் அவற்றில் அடங்கும்.
தற்போது நான்காவது, மூன்றாவது முனையங்களில் இயங்கும் விமானச் சேவைகள் கட்டங்கட்டமாக புதிய ஒருங்கிணைக்கப்பட்ட முனையத்துக்கு மாற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.