புதுடெல்லி: நாம் தமிழர் கட்சி கூறியபடி கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்க இயலாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி, இந்தமுறை சின்னத்தை மாற்றிவிடக்கூடாதா என்று நாம் தமிழர் கட்சி வழக்கறிஞரிடம் நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார்.
சின்னம் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக நாம் தமிழர் கட்சி சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. விசாரணையின்போது கடந்த பல ஆண்டுகளாக கரும்பு விவசாயி சின்னத்தில்தான் போட்டியிட்டதாக நாம் தமிழர் கட்சி தரப்பு தெரிவித்தது.
தேர்தல் ஆணையம் தரப்பில், விதிமுறைகளின்படி முதலில் கோருபவர்களுக்கு முன்னுரிமை அளித்து சின்னங்கள் ஒதுக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்நிலையில், “நீங்கள் கேட்ட சின்னம் கிடைப்பதற்கான அதிர்ஷ்டம் இல்லை போலும். எனவே இந்த முறை சின்னத்தை மாற்றி விடுங்களேன்,” என்று நீதிபதி நகைச்சுவையாக குறிப்பிட்டார். இதையடுத்து விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.