இவ்வாண்டு ஜனவரி முதல் இதுவரை கொவிட்-19 தொடர்பான 40 பொய்ச் செய்திகள் முறியடிக்கப்பட்டு உள்ளன என்று தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார் . பொய்ச் செய்திகளை முறியடிக்கும் முயற்சிகளில் தனது இணையத் தளங்கள், சமூக ஊடகம், Gov.sgயின் வாட்ஸ்ஆப், டெலிகிராம் ஆகிய
தளங்களை அரசாங்கம் பயன்படுத்தியது என்றும் திரு ஈஸ்வரன் கூறினார் .
“பரப்படும் பொய்ச்செய்தியின் விளைவிக்கும் பாதிப்பைப் பொறுத்து, அதற்குரிய நடவடிக்கைகளும் மாறுபடும். சிறிய பாதிப்புகளுக்கு பொஃப்மா சட்ட த்தின் கீழ் திருத்தக் குறிப்பு, கடுமையான பாதிப்புகளுக்கு பலவகைப்பட்ட குற்றங்கள் (பொது ஒழுங்கும் தொல்லையும்) சட்டத்தின் கீழ் நீதிமன்ற குற்றச்சாட்டும் மேற்கொள்ளப்படும்.
பொய்ச்செய்தி அவ்வப்போது தலையெடுக்கும்போது அவற்றைக் கையாள அரசாங்கத்திடன் பல்வேறு வழிகள் கைவசம் உள்ளன,” என்றும் அமைச்சர் விளக்கினார் . அமைச்சருக்கு முன் பேசிய உள்துறை அமைச் சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் அம்ரின் அமின், கொவிட்-19கருமித்ததொற்று தொடர்பில் பொய்ச்செய்தியைப் பரப்பி, பொதுமக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்துவோருக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார் .
உதாரணத்துக்கு, 40 வயது ஆடவர் ஒருவர் அரசாங்கம் சிங்கப்பூரில் பகுதி முடக்கத்தை அறிவிக்க உள்ளது என்று தனக்கு தகவல் கிடைத்துள்ளது என்றும் அதன் தொடர்பில் அனைத்து காப்பிக் கடைகளும் உணவு நிலையங்களும் மூடப்படும் என்றும் பேரங்காடிகள் வாரத்துக்கு இரண்டு
நாட்கள் மட்டும் திறந்திருக்கும் என்றும் பொய்ச்செய்தி பரப்பினார் .
ஆகவே , மக்கள் விரைவில் பொருட்கள் வாங்கி, சேமித்து வைத்துக்ககொள்ளுமாறு அவர் வலியுறுத்தினார் என்றும் திரு அம்ரின் விவரித்தார் . இந்த ஆடவர் கைது செய்யப்பட்டு, அவர் மீது கடந்த மாத ம் 27ஆம் தே தி பொய்ச்செய்தி பரப்பியதற்காக குற்றம் சாட்டப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை அல்லது $10,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.