உலகமெங்கும் கொரோனா கிருமித்தொற்று தலைவிரித்தாடும் இக்காலகட்டத்திலும் இவ்வாண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் $13 பில்லியன் பெறுமானமுள்ள புதிய முதலீடுகளை சிங்கப்பூர் பொருளியல் மேம்பாட்டுக் கழகம் ஒப்பந்தம் செய்துள்ளது.
அனைத்துலக அளவில் சிங்கப்பூருக்கென்றே நற்பெயர் இருப்பதாலும் தரமான அரசாங்கம் இருப்பதாலும் அரசாங்கத்துக்கு மக்களிடமிருந்து வலுவான ஆதரவு இருப்பதாலும் சிங்கப்பூரில் மிகுந்த நம்பிக்கையுடன் முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதாக பிரதமர் லீ சியன் லூங் இன்று தெரிவித்தார். காணொளி மூலம் அவர் ஆற்றிய உரை இன்று பல்வேறு சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
பொருளியலை மேம்படுத்தும், திறன்களையும் முதலீடுகளையும் ஈர்க்கும் கொள்கைகளை ஆதரிக்க சிங்கப்பூரர்களை அரசாங்கத்தால் ஊக்குவிக்க முடியும் என்பது முதலீட்டாளர்களுக்குத் தெரியும் என்றார் பிரதமர் லீ. இந்தக் கொள்கைகள் சிங்கப்பூரர்களுக்கு வேலைகளை உருவாக்கும் என்றார் அவர்.
கொவிட்-19 எனுப்படும் கொரோனா கிருமித்தொற்றை எதிர்கொள்ளும் இக்காலகட்டத்திலும் சிங்கப்பூரை மேலும் சிறந்த நாடாக மேம்படுத்துவது தொடர்பான நீண்டகால இலக்குகளை மறுந்துவிடக்கூடாது என்று திரு லீ நினைவுபடுத்தினார்.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online