சிங்கப்பூரில் வாக்களிப்பு நேரம் இரவு 10 மணிவரை நீட்டிக்கப்பட்ட நிலையில், தற்போது 1,100 (அனைத்து) வாக்களிப்பு நிலையங்களிலும் வாக்குப் பதிவு அதிகாரபூர்வமாக நிறைவு பெற்றுள்ளது.
வாக்குப் பெட்டிகள் அனைத்தும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.
இன்னும் சில மணி நேரங்களில் முன்னோடி வாக்கு எண்ணிக்கை முடிவுகள் (Sample count results) வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னோடி வாக்கு எண்ணிக்கை முடிவுகள் தேர்தல் முடிவுகளின் ஒரு குறிப்பீடுதான்; அவை இறுதியான முடிவுகள் அல்ல.
முன்னோடி வாக்கு எண்ணிக்கை முடிவுகள், அதிகாரபூர்வ முடிவுகள் ஆகியவற்றை உடனுக்குடன் தெரிந்துகொள்ள தமிழ் முரசுடன் தொடர்ந்து இணந்திருங்கள்! https://bit.ly/3gGmzFy