நாளை மாலை 5 மணிக்கு நாட்டு மக்களிடம் பிரதமர் லீ உரையாற்றுவார்

சிங்கப்பூரில் கொவிட்-19 சூழல் அண்மைய நிலவரம் பற்றியும் அடுத்த ஆண்டு நிலவரம் எப்படி இருக்கும் என்பது பற்றியும் நாட்டு மக்களிடையே நாளை (டிசம்பர் 14) மாலை 5 மணிக்கு உரையாற்ற இருக்கிறார் பிரதமர் லீ சியன் லூங்.

அதனைத் தொடர்ந்து, கொவிட்-19 பரவலைக் கையாளும் அமைச்சுகள்நிலை பணிக்குழுவின் இணைத் தலைவர்களான சுகாதார அமைச்சர் கான் கிம் யோங், கல்வி அமைச்சர் லாரன்ஸ் வோங் ஆகியோர் மெய்நிகர் செய்தியாளர் கூட்டம் ஒன்றை நடத்த இருப்பதாக பிரதமரின் ஃபேஸ்புக் செய்தி குறிப்பிடுகிறது.

கொவிட்-19 பற்றி மக்களிடையே பேசி கொஞ்ச காலம் ஆகியிருப்பதைத் தம் பதிவில் குறிப்பிட்ட திரு லீ, மக்களைப் பதற்றம் இன்றி அமைதி காக்குமாறு கேட்டுக்கொண்டார்.

பிரதமரின் உரை அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் நேரடியாக ஒளிபரப்பாகும்.

இவ்வாண்டு பிப்ரவரி 8ஆம் தேதி முதல் கொவிட்-19 சூழல் காரணமாக நாட்டு மக்களிடம் பல முறை பிரதமர் லீ உரையாற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!