சமூக அளவில் மூன்று பேர் உட்பட சிங்கப்பூரில் இன்று (மே 10) நண்பகல் நிலவரப்படி புதிதாக 19 பேருக்கு கொரொனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சமூகத்தில் தொற்று உறுதியான அந்த மூவரில் இருவர், சாங்கி விமான நிலைய கிருமித்தொற்றுக் குழுமத்துடன் தொடர்புடையவர்கள். அந்தத் தொற்றுக் குழுமத்துடன் தொடர்பில் இதுவரை 10 பேருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது.
சிங்கப்பூரில் தற்போது 11 தொற்றுக் குழுமங்கள் உள்ளன.
இதனிடையே, வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்த 16 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இங்கு வந்தவுடன் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்று சுகாதார அமைச்சு சற்று முன்பு வெளியிட்ட அறிக்கையில்
தெரிவித்தது. அந்த 16 பேரில் ஐந்து பேர் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள்.
வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளில் புதிதாக எவருக்கும் தொற்று பதிவாகவில்லை.
சிங்கப்பூரில் இதுவரை கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 61,378ஆக உள்ளது.