விக்டோரியா தொடக்கக் கல்லூரி மாணவருக்கு கிருமித்தொற்று; 2,200 பேரிடம் கொவிட்-19 பரிசோதனை நடத்தப்படும்

விக்டோரியா தொடக்கக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர் ஒருவருக்கு நேற்று (மே 7) கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு இன்று (மே 8) தெரிவித்துள்ளது.

சமூகத்தில் கிருமிப் பரவலைத் தடுக்க, கிருமி தொற்றிய அந்த மாணவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 95 மாணவர்களும் எட்டுப் பணியாளர்களும் தனிமை உத்தரவின்கீழ் வைக்கப்பட்டுள்ளனர்.

நாளை மறுதினத்திற்குள் (மே 10) விக்டோரியா தொடக்கக் கல்லூரி மாணவர்கள், பணியாளர்கள், அக்கல்லூரியில் செயல்படும் கடைக்காரர்கள், அக்கல்லூரிக்குச் சென்ற வருகையாளர்கள் என ஏறக்குறைய 2,200 பேருக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொவிட்-19 பரிசோதனை நடத்தப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்தது.

கிருமி தொற்றிய அந்த மாணவர் கடைசியாக புதன்கிழமை கல்லூரிக்குச் சென்றிருந்தார். அதற்கு அடுத்த நாள் அவருக்கு சுவாசப் பிரச்சினைக்கான அறிகுறிகள் ஏற்பட்டன. அன்றைய தினம் அவர் மருத்துவரிடம் சென்றார். அடுத்த நாள் வெள்ளிக்கிழமை அவருக்குத் தொற்று உறுதியானது.

இந்நிலையில், விக்டோரியா தொடக்கக் கல்லூரி வளாகம் முழுவதுமாக சுத்தப்படுத்தப்பட்டு உள்ளது என்று அமைச்சு கூறியது.

நாளை மறுதினம் (மே 10) முதல் மே 14 வரை அக்கல்லூரி மாணவர்கள் இல்லத்தில் இருந்தவாறு பாடங்களைக் கற்பர். கொவிட்-19 பரிசோதனை முடிவுகள் இறுதிப்படுத்தப்படுவதற்கான கால அவகாசத்தை இந்த ஏற்பாடு வழங்கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!