சுவா சூ காங்கில் நிகழ்ந்த சம்பவம் குறித்து பிரதமர் லீ சியன் லூங் தமது ஃபேஸ்புக் பதிவில் வருத்தம் தெரிவித்துள்ளார். மாது மீது இனவாதத் தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளியான தகவல் தமக்கு ஏமாற்றத்தையும் பெருத்த கவலையையும் அளிப்
பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
"இந்தத் தாக்குதல் நமது பல இன சமூகத்திற்குத் துணைபுரியும் ஒவ்வோர் அம்சத்தின் மீதும் நமது பரஸ்பர மரியாதை மீதும் இன நல்லிணக்கத்தின் மீதும் நடத்தப்பட்டது," என்றார் திரு லீ.
இதே சம்பவம் தொடர்பில் நேற்று நாடாளுமன்றத்தில் கலாசார, சமூக, இளையர் துறை துணை அமைச்சர் எல்வின் டானும் பேசினார்.
"கொவிட்-19 கொள்ளைநோய் கிருமிக்கு எதிராக சிங்கப்பூர் நம்மை பாதுகாக்கும் அதேநேரம் வெறுப்புணர்வு என்னும் கிருமிக்கு எதிராகவும் நம்மை பாதுகாத்துக்கொள்வது மிகவும் அவசியம்," என்றார் அவர்.
இனவாதப் போக்குடன் வெறுப்பைத் தூண்டும் பேச்சு மற்றும் குற்றங்களுக்கு எதிராகவும் ஓரணியாக சிங்கப்பூரர்கள் திரள்வது அவசியம்.
"நாம் தற்போது அனுபவித்து வரும் ஒட்டுமொத்த அமைதி, நல்லிணக்கம் போன்றவை சுலபமாக பாதிக்கப்படுவதை நாம் அனுமதிக்க முடியாது என்றார் அவர்.