கொவிட்-19 கிருமிப் பரவலைத் தடுக்க நடைமுறைப்படுத்தப்பட்ட முடக்கநிலையை மலேசியா மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டித்துள்ளது.
சராசரி அன்றாடப் பாதிப்பு தொடர்ந்து 6,871ஆக இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மலேசிய சுகாதாரத்துறை தெரிவித்தது.
சுகாதாரத்துறையின் பரிந்
துரையை ஏற்று முடக்கநிலை
நீட்டிக்கப்படுவதாக மலேசியாவின் மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நேற்று கூறினார்.
முடக்கநிலை இம்மாதம் 15ஆம் தேதியிலிருந்து 28ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.