சிங்கப்பூரில் கொவிட்-19 விதிமுறைகளை மீறியதற்காக மொத்தம் 16 உணவு, பானக் கடைகளை மூடும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. 1,500 பேர் எச்சரிக்கப்பட்டு உள்ளனர்.
கொவிட்-19 விதிகள் மீறப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த அதிகாரிகள் சுற்றுக்காவலையும் பரிசோதனைகளையும் முடுக்கிவிட்டு இருக்கிறார்கள்.
ஆர்ச்சர்ட் ஹோட்டலில் பிப்ரவரி மாதம் நடந்த பிறந்தநாள் கொண்டாட்டம் ஒன்றில் கலந்துகொண்ட 11 பேருக்குத் தலா $300 அபராதமும் விதிக்கப்பட்டு இருக்கிறது.
அந்தக் கொண்டாட்டம் காரணமாக ஆர்ச்சர்ட் ஹோட்டல் 30 நாட்கள் மூடப்பட்டது.
இதனிடையே, கொவிட்-19 விதிகளை மீறாமல் நிபந்தனைகளுக்கு உட்பட்டு நடந்துகொள்ளும்படி பொதுமக்களையும் நிறுவனங்களையும் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சு வலியுறுத்தியது.
பூங்காக்கள், கடற்கரைகள், கூடைப்பந்து விளையாட்டுக் கூடங்கள், வீடமைப்பு வளர்ச்சிக் கழக குடியிருப்புப் பேட்டை பொது இடங்கள் போன்ற இடங்களில் வரும் வாரங்களில் கடுமையான அமலாக்க நடவடிக்கைகள் இடம்பெறும் என்று அமைச்சு எச்சரித்தது.
தண்டனை பிறப்பிக்கப்பட்ட 16 உணவு, பானக் கடைகள் வெவ்வேறான குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு பேருக்கும் அதிகமானவர்கள் ஒரே மேசையில் அமர்ந்து சாப்பிட அனுமதித்து இருந்தன.
சில கடைகள் ஒரு மீட்டர் இடைவெளியில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து இருப்பதை உறுதிப்படுத்த தவறிவிட்டன. கடைகள் பொதுவாக 10 நாட்கள் மூடப்பட்டன.
பாலஸ்டியர் ரோட்டில் உள்ள 'பியூட்டி ஜேட் பார்' என்ற கடைக்கு கூடுதலாக $1,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் 13 உணவு, பானக் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாக சென்ற வாரம் அமைச்சு தெரிவித்தது.
தஞ்சோங் பகார் ரோட்டில் உள்ள 'சிக்கன் அப்' என்ற கடைக்கு மீண்டும் தவறு செய்ததற்காக $2,000 அபராதம் விதிக்கப்பட்டது.
உணவு, பானக் கடைகளில் இரு வருக்கு மேல் கூடியதற்காக, முகக்கவசம் அணியாமல் இருந்ததற்காக மேலும் 15 பேருக்குத் தலா $300 அபராதம் விதிக்கப்பட்டது.
தேசிய பூங்காக் கழகம் நிர்வகித்து நடத்தும் பூங்காக்களிலும் கடற்கரைகளிலும் ஜூன் 25 முதல் 27 வரை 1,500 பேருக்கு எச்சரிக்கைக் கடிதம் கொடுக்கப்பட்டது.
இதனிடையே, ஹோட்டல்கள், விருந்தினர்களை அணுக்கமாகக் கண்காணித்து விதிகளை மீறு வோருக்கு எதிராக சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் கடுமையாக நடவடிக்கை எடுக்கும் என்று தெரி வித்த அமைச்சு, கொவிட்-19 விதி களை மீறாமலும் சுத்தமான பழக் கங்களை கடைப்பிடித்தும் மக்கள் நடந்து கொள்ளவேண்டும் என்று அறிவுரை கூறியது.