கனமழை காரணமாக ஹவ்காங் அவென்யூ 8, பொங்கோல் வேயில் திடீர் வெள்ளம்

ஹவ்காங் அவென்யூ 8லும் தெம்பனிஸ் விரைவுச்சாலைக்கு இட்டுச்செல்லும் பொங்கோல் வே துணைச் சாலையிலும் இன்று (ஆகஸ்ட் 30) காலை திடீர் வெள்ளம் ஏற்பட்டது.

இன்று காலை பெய்த கனமழை காரணமாக தீவின் பல பகுதிகளிலும் திடீர் வெள்ளம் ஏற்படும் அபாயம் நிலவியதாக பொதுப் பயனீட்டுக் கழகம் தெரிவித்தது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அவ்விரு பகுதிகளிலும் மோட்டார் வாகனமோட்டிகள், பாதசாரிகளுக்கு உதவ அதிகாரிகள் பணியில் ஈடுபட்டதாக கழகம் கூறியது.

அப்பகுதிகளில் பின்னர் வெள்ளநீர் வடிந்துவிட்டதாக கழகம் கூறியது.

தீவின் பல பகுதிகளில் வடிகால்களிலும் கால்வாய்களிலும் மழைநீர் முழுக் கொள்ளளவை எட்டிவிட்டதாக அல்லது நெருங்கிவிட்டதாக கழகம் சொன்னது. பாலஸ்டியர் சாலை, தாம்சன் சாலை, அப்பர் பாய லேபார் சாலை, புக்கிட் தீமா சாலையில் உள்ள சிம் டார்பி சென்டர் உள்ளிட்டவை அப்பகுதிகளில் அடங்கும்.

சிங்கப்பூரின் மத்தியப் பகுதிகள் சிலவற்றிலும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!