பேருந்து, ரயில்களில் களை கட்டும் தீபாவளி அலங்காரம்

பேருந்து, ரயில்களில் களை கட்டும் தீபாவளி அலங்காரம்

1 mins read
703fb2e6-6f22-40a2-b91f-5b70854af2a8
-

கொவிட் சூழ­லில் விழாக்­கா­லத்­துக்கு உற்­சா­கம் ஊட்­டும் வகை­யில் பேருந்­து­களும் ரயில்­களும் வண்ண மயில்­கள், தீபங்­கள், கோலங்­கள் என கண்ணை மயக்­கும் அலங்­கா­ரத்­து­டன் நவம்­பர் 21ஆம் தேதி­வரை வலம் வரும்.

பொதுப் போக்­கு­வ­ரத்­தின் தீபா­வளி அலங்­கா­ரங்­களை நேற்று அதி­கா­ர­பூர்­வ­மா­கத் திறந்­து­வைத்த போக்­கு­வ­ரத்து அமைச்­சர் எஸ் ஈஸ்­வ­ரன், சிங்­கப்­பூ­ரின் பல இன மக்­களும் இந்­தி­யர்­க­ளின் முக்­கிய விழாக்­களில் ஒன்­றான தீபா­வளி குறித்து அறிந்­து­கொள்­ளச் செய்­வது இந்த அலங்­கா­ரத்­தின் நோக்­கம் என்­றார். இந்த அலங்­கா­ரங்­கள் பய­ணங்­களை மகிழ்ச்­சி­கரமான தாக்கும் என்று அவர்.

தற்­போதை கொவிட்-19 சூழ­லில் அனை­வ­ரும் பாதிக்­கப்­பட்­டி­ருந்­த­போ­தி­லும் தீபா­வளி போன்ற விழாக்­கள் அனை­வ­ரும் விழிப்­பு­ணர்­வு­டன் ஒருங்­கி­ணைந்த சமு­தா­ய­மாக இருக்­க­வும் கொண்­டா­ட­வும் வழி­வ­குக்­கிறது என்­றார் அவர்.

வடக்கு-கிழக்கு, வடக்குதெற்கு, கிழக்கு-மேற்கு, டௌன்­ட­வுன், வட்டப்பாதை ரயில் தடங்­களில் செல்­லும் சில ரயில்­கள், 23, 48, 65, 147, 166 ஆகிய பேருந்து சேவை ­க­ளு­டன், லிட்­டில் இந்­தியா, சிராங்­கூன், பிடோக் எம்­ஆர்டி நிலை­யங்­கள், அங் மோ கியோ, பூன் லே பேருந்து நிலை­யங்­க­ளி­லும் பல வண்ண அலங்­கா­ரங்­க­ளு­டன் தீபா­வளி களை­கட்­டு­கிறது.

கூடு­தல் செய்தி: சக்தி மேகனா