கொவிட் சூழலில் விழாக்காலத்துக்கு உற்சாகம் ஊட்டும் வகையில் பேருந்துகளும் ரயில்களும் வண்ண மயில்கள், தீபங்கள், கோலங்கள் என கண்ணை மயக்கும் அலங்காரத்துடன் நவம்பர் 21ஆம் தேதிவரை வலம் வரும்.
பொதுப் போக்குவரத்தின் தீபாவளி அலங்காரங்களை நேற்று அதிகாரபூர்வமாகத் திறந்துவைத்த போக்குவரத்து அமைச்சர் எஸ் ஈஸ்வரன், சிங்கப்பூரின் பல இன மக்களும் இந்தியர்களின் முக்கிய விழாக்களில் ஒன்றான தீபாவளி குறித்து அறிந்துகொள்ளச் செய்வது இந்த அலங்காரத்தின் நோக்கம் என்றார். இந்த அலங்காரங்கள் பயணங்களை மகிழ்ச்சிகரமான தாக்கும் என்று அவர்.
தற்போதை கொவிட்-19 சூழலில் அனைவரும் பாதிக்கப்பட்டிருந்தபோதிலும் தீபாவளி போன்ற விழாக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் ஒருங்கிணைந்த சமுதாயமாக இருக்கவும் கொண்டாடவும் வழிவகுக்கிறது என்றார் அவர்.
வடக்கு-கிழக்கு, வடக்குதெற்கு, கிழக்கு-மேற்கு, டௌன்டவுன், வட்டப்பாதை ரயில் தடங்களில் செல்லும் சில ரயில்கள், 23, 48, 65, 147, 166 ஆகிய பேருந்து சேவை களுடன், லிட்டில் இந்தியா, சிராங்கூன், பிடோக் எம்ஆர்டி நிலையங்கள், அங் மோ கியோ, பூன் லே பேருந்து நிலையங்களிலும் பல வண்ண அலங்காரங்களுடன் தீபாவளி களைகட்டுகிறது.
கூடுதல் செய்தி: சக்தி மேகனா