உக்ரேன் ரஷ்யாவில் இருக்கும் அதன் குடிமக்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறும்படி கூறியிருக்கிறது.
ரஷ்யாவில் சுமார் 3.19 மில்லியன் உக்ரேனிய மக்கள் வசிப்பதாகக் கூறப்படுகிறது.
அத்துடன் உக்ரேன் முழுவதும் அவசரநிலை அறிவிக்கப்படும் என்று அந்நாட்டுப் பாதுகாப்பு மன்றம் அவ்வாறு பரிந்துரை செய்துசெய்ததாகக் கூறப்பட்டுள்ளது.
உயர்பாதுகாப்பு அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியது.
அந்த அவசரநிலை 30 நாள்களுக்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உக்ரேனிய நாடாளுமன்றம் அந்தப் பரிந்துரைக்கு ஒப்புதல் அளித்தபின்னர் அது நடப்புக்கு வரும்.
மேலும், ஆயுதப் படைகளில் போர்க்கால படைவீரர்களாகச் சேர. 18 முதல் 60 வயதினருக்கு உக்ரேனிய அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
ரஷ்யா கடந்த திங்கள்கிழமை அன்று உக்ரேனின் இரண்டு பிரிவினைவாத மாநிலங்களை தனிநாடுகளாக அங்கீகரித்ததை அடுத்து, பதற்றம் பெருமளவு அதிகரித்துள்ளது.
அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது பொருளியல் தடைகளை விதித்துள்ளன.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின், தமது நாட்டு நலன் குறித்தும் நாட்டுமக்கள் நலன் குறித்தும் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்று புதன் அன்று கூறியுள்ளார்.
சிக்கலான அரசதந்திரப் பிரச்சினைகளுக்கு ரஷ்யா நேரடியான, நேர்மையான பேச்சுவார்த்தைக்கு எப்போதுமே தயார் என்றும் அவர் தொலைக்காட்சியில் கூறினார்.
ஆனால் அவர் அவ்வாறு கூறும் முன்னர், ரஷ்ய நாடாளுமன்ற மேல் அவை, உக்ரேனின் இரண்டு பிரிவினைவாத மாநிலங்களுக்குள் 'அமைதிப்படையினரை' அனுப்ப திரு புட்டினுக்கு ஒருமனதாக ஒப்புதல் அளித்தது.
ரஷ்யா உக்ரேனைத் தாக்கி, இரு நாட்டுப் போர் மூண்டால், உயிர்உடற்சேதத்தைத் தவிர உலகப் பொருளியல், உணவு விலைகள், எண்ணெய் விலைகடள உள்ளிட்டவை பெருமளவு பாதிக்கப்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.