ராஜபக்சே குடும்பத்தாருக்கு மீதான நெருக்கடி மேலும் மேலும் அதிகரித்து வருகிறது.
மகிந்த ராஜபக்சே, நமல் ராஜபக்சே இருவரும் நாட்டை விட்டு வெளியேற கொழும்பு நீதிமன்றம் பயணத் தடை விதித்தது.
ஆளும் கட்சி அரசியல் புள்ளிகள், முக்கிய அதிகாரிகள் என 17 பேர் வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டது.
திங்கட்கிழமை அன்று காலி முகத் திடத்தில் தொடங்கிய வன்முறையின் தொாடர்பில் அவர்களுக்குப் பயணத் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் இலங்கையின் அடுத்த பிரதமர் யார் என்பதில் குழப்பம் நிலவி வருகிறது.
முன்னைய பிரதமரும் எதிர்த்தரப்பு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான திரு ரணில் விக்ரமசிங்கே வியாழன் மாலை பிரதமர் பதவியை ஏற்பார் என்று அவரது கட்சி கூறியது.
திரு ரணில் விக்ரமசிங்கே அதிபர் கோத்தபயாவுடன் புதன் அன்று ரகசியக் கலந்துரையாடல் நடத்தியதாக இலங்கை ஊடகங்கள் கூறின.
அதே வேளையில், இடைக்கால அரசாங்கத்தை அமைக்க அதிபர் கோத்தபயா ராஜபக்ச விடுத்த அழைப்பை ஏற்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசா அறிக்கை விடுத்துள்ளார்.
அதற்கு நிபந்தனையாக அதிபர் கோத்தபயா பதவி விலக வேண்டும் என்றும் அதிபர் பதவியே ஒழிக்கப்பட வேண்டும் என்று அவர் தமது அறிக்கையில் கூறினார்.
இவ்வேளையில் அதிபர் கோத்தபயாவுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று இலங்கை நாடாளுமன்ற நாயகரின் அலுவகம் தெரிவித்தது.