வடகொரியாவில் கொவிட்-19 கிருமிப் பரவல்; தனிமையில் 187,000 பேர்

வடகொரியாவில் குறைந்தது ஒருவர் கொவிட்-19 தொற்றால் மாண்டுவிட்டார்.

சுமார் 350,000 பேருக்குக் காய்ச்சல் அறிகுறிகள் ஏற்பட்டுள்ளதாக வடகொரியாவின் அதிகாரத்துவ கேசிஎன்ஏ செய்தி நிறுவனம் கூறியது.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் நாட்டில் 'அடையாளம் தெரியாத காய்ச்சல் பரவி வருவதாக' கேசிஎன்ஏ தெரிவித்தது.

அந்தக் காய்ச்சல் ஏற்பட்டிருக்கும் சுமார் 187,000 பேர் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாக அது சொன்னது.

வடகொரியாவில் கிருமிப்பரிசோதனை செய்வதற்கு போதிய வசதிகளும் வழிகளும் இல்லாததால், உண்மையான தொற்று எண்ணிக்கை வெகு அதிகமாக இருக்கலாம்.

கொவிட்-19 பரவல் தொடங்கியதிலிருந்து வடகொரியத அதன் எல்லைகளை மூடியது.

ஆனால் அது சில மாதங்களுக்கு முன் சீனாவுடனான எல்லையைத் திறந்துவிட்டு இரு நாட்டு வணிகத்துக்கு வழிவிட்டது.

அதன்வழி கிருமி வடகொரியாவுக்குள் வந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

அதனுடன், கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி வடகொரியாவில் மிகப் பெரும் ராணுவப் பேரணி இடம்பெற்றது.

அதில் பல்லாயிரம் பேர் முகக்கவசங்கள் இல்லாமல் கலந்துகொண்டார்கள்.

அந்த நிகழ்ச்சியின் மூலம் கொவிட்-19 பரவி இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!