பொது சுகாதார நெருக்கடியின்போது நம்பிக்கையைவிட முக்கியமானது வேறெதுவுமில்லை. கொவிட்-19 கொள்ளைநோய் சிரம காலத்தில் தனிப்பட்டவர்களிடையிலும் அரசாங்கம், பொதுமக்கள் ஆகியோர் இடையிலும் சிங்கப்பூர் மிதமிஞ்சிய நம்பிக்கையைப் பெற்றுள்ளது.
சிங்கப்பூரில் உள்ள ஊடகங்
களின் சரியான, கச்சிதமான தகவல்கள் இதனைச் சாத்தியப்படுத்தியதாக தொடர்பு தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ தெரிவித்து உள்ளார். அரசாங்கம், ஊடகம் ஆகியவற்றுக்கு இடையிலான இதுதரப்பு நம்பிக்கை மற்றும் மரியாதையையும் இது உணர்த்துகிறது என்று கூறிய அவர், இந்த உறவு ஒரு சுதந்திர தேசமாக நாடு உள்ளவரை தொடர்ந்து வரும் என்றார்.
"இந்த இருதரப்பு உறவு தொடர்ந்து கட்டிக்காக்கப்பட வேண்டும். ஊடகம், அரசு உறவு நிலைத்
திருக்கத் தேவைப்படும் எல்லா முயற்சிகளும் எடுக்கப்பட வேண்டும்," என்றார் திருவாட்டி டியோ.
சிங்கப்பூர் பத்திரிகையாளர் சங்கத்தின் 50வது ஆண்டுவிழாவையொட்டி நடத்தப்பட்ட 'பிரஸ் பால்' விருந்தில் பங்கேற்று அவர் பேசினார். ஆர்ச்சர்ட் ஹோட்டலில் நடைபெற்ற இந்நிகழ்வில் 400க்கும் மேற்பட்ட ஊடக நிபுணர்களும் அவர்களின் விருந்தினர்களும் கலந்துகொண்டனர்.
"நாட்டு நிர்மாணத்தில் உள்ளூர் ஊடகங்கள் வகித்த பங்கிற்கு அரசாங்கம் அளித்த மதிப்பின் அடிப்படையில் இந்த உறவு கட்டி எழுப்பப்பட்டது. இது நான்காம் தலைமுறைத் தலைமைத்துவத்
திலும் நீடிக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்," என்றார் அமைச்சர்.
2021 மே மாதம் தொடர்பு தகவல் அமைச்சு பொறுப்பை ஏற்ற திருவாட்டி டியோ, ஊடக முன்னேற்றத்தில் 4ஆம் தலைமுறைத் தலைவர்கள் எவ்வாறு பங்கு வகிக்கலாம் என்று விளக்கினார்.
மேலும், கொள்ளைநோய் பரவல் காலத்தில் அதுதொடர்பான தகவல்களை மக்களுக்கு அரசாங்கம் கொண்டு சேர்த்த விதத்தையும் அவர் தெளிவுபடுத்தினார்.
"ஆக அண்மைய நிலவரங்
களையும் பொது சுகாதார நட
வடிக்கைகளையும் விவரிக்க பத்திரிகையாளர் சந்திப்பை அரசாங்கம் தொடர்ந்து நடத்தியது. ஊடகங்கள் எழுப்பிய வினாக்களுக்கு, உள்ளது உள்ளபடி அரசாங்கம் பதிலளித்தது.
"கொள்ளைநோயின் தொடக்க காலத்தில், குறிப்பாக, 'சர்கிட் பிரேக்கர்' எனப்படும் கொள்ளைநோய் முறியடிப்புத் திட்டம் நடப்பில் இருந்தபோது அமைச்சர்கள் கான் கிம் யோங்கும் லாரன்ஸ் வோங்கும் வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார்கள்.
"எந்தவொரு முக்கிய தகவலும் விடுபட்டுப்போகாத அளவுக்கு அரசாங்கம் கொள்ளைநோய் தகவல்கள் அனைத்தையும் முழுமையாகவும் சரியாகவும் பகிர்ந்துகொண்டது. இது, கொவிட்-19 நிலவரத்தைச் சரியாகவும் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையிலும் ஊடகங்கள் வெளியிட வழி ஏற்படுத்தியது.
"அரசாங்கம் அறிவித்த கொள்கைகள் தொடர்பில் மருத்துவ நிபுணர்களிடம் ஊடகங்கள் நேர்காணல் நடத்தின. இவற்றின் காரணமாக, முகக்கவசம் அணிதல், தடுப்பூசி போட்டுக்கொள்ளுதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் போன்ற நடைமுறைகளில் மற்ற நாடுகளைப்போல் எந்தவொரு கருத்து வேற்றுமையும் இங்கு ஏற்படவில்லை," என்றார் திருவாட்டி டியோ.
அமைச்சர்: கொள்ளைநோய் காலத்தில் சிறப்பான தகவல் பரிமாற்றம்