கத்திக்குத்துக்கு ஆளான எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, இயந்திர உதவி இல்லாமல் சுவாசிக்கிறார், பேசுகிறார்

கத்திக்குத்துக்கு ஆளான புகழ்பெற்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, செயற்கை சுவாச இயந்திரத்தின் உதவி இல்லாமல் இயற்கையாக மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது.

திரு ருஷ்டியால் பேச முடிவதாகவும் அவரது படைப்புகளுக்கான முகவர் ஆன்ட்ரூ வைலி ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

அவரது உடல்நலம் பற்றி வேறு தகவல்கள் வெளியிடப்படவில்லை.

நியூயார்க் மாநிலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த ஒரு நிகழ்ச்சியில் உரையாற்ற திரு ருஷ்டி மேடை ஏறியபோது, ஆடவர் ஒருவர் அவரை பல முறை கத்தியால் குத்தினார்.

திரு ருஷ்டி படுகாயம் அடைந்தார்.

அவரைக் குத்தியதாக சந்தேகிக்கப்படும் ஹாடி மட்டர் என்ற நபர் மீது நியூயார்க் நீதிமன்றத்தில் நேற்று கொலைமுயற்சி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

24 வயது ஹாடி மட்டர், மேடைக்கு ஓடி திரு ருஷ்டியை குறைந்தது பத்து முறை முகத்திலும் வயிற்றிலும் கழுத்திலும் குத்தினார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

ஆனால் மட்டர் தாம் குற்றம் புரியவில்லை என்று நீதிமன்றத்தில் கூறினார்.

பிணை வழங்கப்படாததால் அவர் தற்போது தடுப்புக்காவலில் உள்ளார்.

திரு ருஷ்டிக்கு ஒரு கையில் உள்ள நரம்புகள் அறுந்துபோய் விட்டன என்று நேற்று கூறப்பட்டது.

அவரது கல்லீரலும் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அவரது ஒரு கண்ணில் கண்பார்வையை இழக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாம் எழுதிய சர்ச்சைக்குரிய நாவலின் தொடர்பில் திரு ருஷ்டிக்கு பல்லாண்டுகளாக கொலைமிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!