மோடி சென்னை பயணம்; விமான நிலைய முனையம் திறப்பு, பாதுகாப்புப் பணி தீவிரம்

இந்­தி­யப் பிர­த­மர் நரேந்­திர மோடி நாளை சென்­னைக்­குப் பய­ணம் மேற்­கொள்­கி­றார்.

அவ­ரது இந்த இரண்டு நாள் பய­ணம் இம்­மா­தம் 9ஆம் தேதி­யன்று நிறை­வு­பெ­றும்.

நாளை மறு­நாள் அவர் சென்னை விமான நிலை­யத்­தின் புதிய ஒருங்­கி­ணைக்­கப்­பட்ட முனை­யத்­தைத் திறந்­து­வைக்­கி­றார்.

சென்னை விமான நிலை­யத்­தின் புதிய முனை­யத்­துக்­கான கட்­டு­மா­னப் பணி­கள் ஐந்து ஆண்­டு­க­ளுக்கு முன்பு தொடங்­கி­யது.

கூடு­தல் பய­ணி­கள் போக்­கு­வரத்­தைக் கையாள இந்த முனை­யம் கட்­டப்­பட்­டுள்­ளது.

ஒவ்­வோர் ஆண்­டும் கிட்­டத்­தட்ட 35 மில்­லி­யன் பய­ணி­களைக் கையா­ளும் ஆற்­றல் இந்த முனை­யத்­துக்கு இருக்­கும் என்று நம்­பப்­ப­டு­கிறது.

அத்­து­டன், புதிய முனை­யத்­தால் மணிக்கு 45 விமா­னங்­க­ளைச் சமா­ளிக்க முடி­யும். புதிய முனை­யத்­தைக் கட்ட இந்­திய அர­சாங்­கம் ரூ. 2,500 கோடி முத­லீடு செய்­துள்­ளது.

அதில் அனைத்­து­லக, உள்­ளூர் விமா­னச் சேவை­கள் வழங்­கப்­படும்.

இது ஒருபுறம் இருக்க, சென்னை-கோயம்­புத்­தூர் ரயில் பாதை­யில் வந்தே பாரத் எக்ஸ்­பி­ரஸ் சேவை­யை­யும் பிரதமர் மோடி தொடங்­கி­ வைப்பார்.

இதை அவர் சென்னை மத்­திய ரயில் நிலை­யத்­தி­லி­ருந்து தொடங்­கி­வைக்க இருக்­கி­றார். செங்­கோட்­டைக்­கும் தாம்­ப­ரத்­துக்­கும் இடை­யி­லான விரைவு ரயில் சேவை­யை­யும் திருத்­து­றைப்­பூண்­டிக்கும் அகஸ்­தி­யம்­பள்­ளிக்­கும் இடை­யி­லான ரயில் சேவை­யை­யும் திரு மோடி தொடங்­கி­வைக்க இருக்­கி­றார்.

இந்த ரயில் சேவை கோயம்­புத்­தூர், திரு­வா­ரூர், நாக­பட்­டி­னம் ஆகிய இடங்­க­ளி­லி­ருந்து புறப்­படும் பய­ணி­க­ளுக்குப் பலனளிக்கும்.

சென்­னை­யில் உள்ள ஸ்ரீ ராம­கி­ருஷ்ணா மடத்­தின் 125வது ஆண்டு விழா கொண்­டாட்­டத்­தி­லும் பிர­த­மர் மோடி கலந்­து­கொள்­கி­றார்.

என்­எச் 744 தேசிய நெடுஞ்­சா­லைத் திட்­டத்­துக்­கான அடிக்­கல் நாட்டு விழா­வி­லும் பிர­த­மர் மோடி கலந்­து­கொள்­கி­றார்.

தமிழ்­நாடு-கேரளா சாலை இணைப்பை மேம்­ப­டுத்த ரூ. 2,400 கோடி செல­வில் சாலை அமைக்­கப்­ப­டு­கிறது. கேர­ளா­வி­லி­ருந்து மதுரை மீனாட்சியம்மன் கோயில், ஸ்ரீவில்­லி­புத்­தூர் ஆண்­டாள் கோயில் ஆகிய இடங்­க­ளுக்­குச் செல்­லும் பக்­தர்­க­ளுக்­கும் தமிழ்­நாட்­டி­லி­ருந்து கேர­ளா­வில் உள்ள சப­ரி­ம­லைக்­குச் செல்­லும் பக்­தர்­க­ளுக்­கும் வச­தி­யாக இந்த சாலை அமைக்­கப்­ப­டு­கிறது.

பிர­த­மர் மோடி­யின் வரு­கையை ஒட்டி தமிழ்­நாட்­டில் பாது­காப்­புப் பணி­கள் முடுக்­கி­வி­டப்­பட்­டுள்­ளன. பாது­காப்பு ஏற்­பா­டு­களைக் கவ­னிப்­ப­தற்­காக சிறப்­புப் பாது­காப்புப் படை அதி­கா­ரி­கள் சென்னை வந்­துள்ளனர். அது­மட்­டு­மல்­லாது, பாது­காப்­புப் பணி­களில் தமி­ழக காவல்­துறை

தீவி­ரம் காட்டி வரு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!