‘முகக்கவசம் அணிந்திருந்தால் கடைக்குள் அனுமதிக்க வேண்டாம்’

வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிந்திருந்தால் கடைக்குள் அனுமதிக்க வேண்டாம் என்று அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் அறிவுறுத்தியுள்ளார்.

நியூயார்க் நகரில் கொவிட்-19 நோய்த்தொற்றுக் காலத்தில் இருந்து கடைகளில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

திருட்டுக் குற்றங்களைக் குறைக்கும் நோக்கில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக திரு ஆடம்ஸ் குறிப்பிட்டார். 

முகக்கவசம் அணியாமல் இருந்தால் குற்றவாளிகளை எளிதில் அடையாளம் காணமுடியும் என்றார் அவர்.

கடைக்குள் நுழைந்த பிறகு வாடிக்கையாளர்கள் முகக்கவசத்தை அணிந்துகொள்ளலாம் என்று அவர் கூறியுள்ளார். 

நியூயார்க் நகரக் காவல்துறையும் முகக்கவசம் அணிந்திருப்போரைக் கடைக்குள் அனுமதிக்க வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளது. 

நோய்த்தொற்றுப் பாதுகாப்பு நடவடிக்கையை சாதகமாகப் பயன்படுத்தி குற்றவாளிகள் முகக்கவசம் அணிந்து திருடுவதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர். 

 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!