‘காதலில் விழ’ மாணவர்களுக்கு ஒரு வார விடுமுறை அளிக்கும் கல்லூரிகள்

சீனாவில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்துள்ள நிலையில், மாணவர்களைக் ‘காதலில் விழ’வைக்க அங்குள்ள ஒன்பது தொழில்முறைக் கல்லூரிகள் அவர்களுக்கு ஒரு வார விடுமுறை அளித்துள்ளன.

ஏப்ரல் 1 முதல் 7ஆம் தேதிவரை மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று அந்தக் கல்லூரிகளை நடத்தும் ஃபன் மெய் கல்விக் குழுமம் மார்ச் 23ஆம் தேதி அறிவித்திருந்தது.

இயற்கையை நேசித்து, வாழ்க்கையை நேசித்து, காதலை ரசிக்குமாறு மாணவர்களிடம் அக்குழுமம் கேட்டுக்கொண்டது.

“கல்லூரி வளாகத்தைவிட்டு வெளியேச் சென்று, இயற்கையுடன்  இணைந்து, வசந்தக் காலத்தின் அழகை ரசியுங்கள்,” என்று ஃபன் மெய் குழுமத்தின்கீழ் இயங்கும் மியன்யாங் ஃபிளையிங் தொழில்முறைக் கல்லூரி குறிப்பிட்டது.

விமானப் போக்குவரத்துத் துறையில் சேர விரும்பும் மாணவர்களுக்கான இந்தக் கல்லூரிகள், 2019 முதலே வசந்தக் காலத்தில் ஒரு வாரகால விடுமுறையை அளித்து வந்துள்ளன.

எனினும், “பூக்கள் பூக்கும் தருணங்களை ரசியுங்கள், காதலில் விழுங்கள்” எனும் இவ்வாண்டின் கருப்பொருள், காதலுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.

ஆனால், இந்த ஒரு வாரத்தில் மாணவர்களுக்குக் காதலோடு சேர்ந்து வருகிறது வீட்டுப்பாடமும். 

பயணக் குறிப்பு, கைவினைப் பொருள்களைத் தயாரிப்பது, பயணம் தொடர்பான காணொளிகளைப் பதிவுசெய்வது, தங்கள் தனிப்பட்ட வளர்ச்சி குறித்து அறிக்கைகளை எழுதுவது போன்ற பணிகளை மாணவர்கள் முடிக்க வேண்டும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!