தோக்கியோ: மேலும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம், வானிலை ஆகிய சவால்களுக்கு இடையே தெற்கு ஜப்பானில் இரண்டு பெரிய நிலநடுக்கங்களில் சிக்குண்டிருப்பவர்களை மீட்கும் பணிகளில் மீட்புப்பணியாளர்கள் ஈடுபட்டு வரும் வேளையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 41ஆக உயர்ந்துள்ளது. ஆறுபேரைக் காணவில்லை என்று கூறப்படுகிறது. நிலச்சரிவுகளுக்குள் அல்லது சிதைந்து போன வீடுகளுக்குள் அவர்கள் மாட்டிக்கொண்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
நிலநடுக்கத்தின்போது இடிந்து விழுந்த கட்டடங்களின் இடிபாடுகளில் இன்னும் பலர் சிக்கியிருப்பதாக அஞ்சப்படுகிறது. அவர்களைக் காப்பாற்றும் பணியில் மீட்புக் குழுவினர் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். நிலநடுக்கத்தைத் தொடர்ந்து வீடுகளைவிட்டு வெளியேறிய மக்கள் தெருக்களிலும் பூங்காக்களிலும் தஞ்சம் அடைந்தனர். ஒரு கிராமத்தில் அணைக்கட்டு உடைந்ததை அடுத்து கிராம மக்கள் அனைவரும் வெளி யேற்றப்பட்டனர்.