மணிலா: அமெரிக்க அதிபர் ஒபாமாவும் பிலிப்பீன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்டர்ட்டேயும் லாவோசில் விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு முன்பு சிறிது நேரம் உரையாடியதாக திரு டுட்டர்ட்டேயின் அமைதி ஆலோசகர் டுரேசா கூறியதாக பிலிப்பீன்ஸ் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் சார்ல்ஸ் ஜோஸ் கூறினார். அவ்விரு தலைவர்களும் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு சிறிது நேரம் பேசிக் கொண்டதாக அவர் சொன்னார்.
முன்னதாக திரு டுட்டர்ட்டேயை திரு ஒபாமா சந்தித்துப் பேசமாட்டார் என்றும் திட்டமிடப்பட்டிருந்த அந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டுவிட்டதாகவும் வெள்ளை மாளிகை கூறியிருந்தது. திரு ஒபாமாவைப் பற்றி திரு டுட்டர்ட்டே தகாத ஒரு சொல்லைப் பயன்படுத்தி விமர்சனம் செய்ததால் அந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறினார். இந்நிலையில் லாவோசில் நடந்த ஆசியான்=அமெரிக்க மாநாட்டில் கலந்துகொள்வதை திரு டுட்டர்ட்டே தவிர்த்து விட்டதாக அதிகாரிகள் கூறினர்.