ஜகார்த்தா: இந்தோனீசியாவில் ஜகார்த்தா ஆளுநர் பசுகி ஜஹஜா புர்னாமாவுக்கு எதிராக ஆயிரக் கணக்கானோர் நேற்று ஊர்வல மாகச் சென்றனர். பள்ளிவாசல்கள் மற்றும் பள்ளிக் கூடங்களில் ஒன்றுகூடிய ஆர்ப் பாட்டக்காரர்கள் மத்திய ஜகார்த் தாவில் உள்ள தேசிய நினைவிடம் வரை ஊர்வலமாகச் சென்றனர். தேசிய நினைவிடத்தில் அமைதியான முறையில் நேற்று நடந்த பேரணியில் 200,000க்கும் அதிகமானோர் கலந்துகொண்ட தாக போலிசார் கூறினர்
ஜகார்த்தா ஆளுநர் பசுகி ஜஹஜா புர்னாமாவுக்கு எதிராக பல இடங்களில் ஒன்றுகூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் நேற்று தேசிய நினைவிடம் வரை ஊர்வலமாகச் சென்றனர். அந்த இடத்தில் நேற்று நடைபெற்ற பேரணியில் 200,000க்கும் அதிகமானோர் கலந்துகொண்டதாக போலிசார் கூறினர். கடினப்போக்கு கொண்ட பழமைவாத குழுக்கள் அந்த மாபெரும் பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தன. அஹோக் என்றழைக்கப்படும் ஜகார்த்தா ஆளுநர் மீது சமய நிந்தனை தொடர்பில் குற்றம் சாட்டப்பட வேண்டும் என்றும் அவரைக் கைது செய்ய வேண்டும் என்றும் அந்த குழுக்கள் வலியுறுத்தி வருகின்றன. படம்: ஏஎஃப்பி