பங்ளாதேஷ் ஆடை தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்ததில் 10 பேர் பலி

டாக்கா: பங்ளாதே‌ஷில் உள்ள ஆடை தயாரிக்கும் தொழிற்சாலை யில் கொதிகலன் வெடித்ததில் 9 ஊழியர்கள் உயிரிழந்ததாகவும் பலர் காயம் அடைந்ததாகவும் அதிகாரிகள் கூறினர். தலைநகர் டாக்காவில் உள்ள ஆடை தொழிற்சாலையில் திங்கட் கிழமை எதிர்பாராதவிதமாக கொதிகலன் வெடித்துச் சிதறிய தாகவும் இந்த விபத்தில் பலர் உயிரிழந்ததாகவும் தீயணைப்புப் படை அதிகாரி ஒருவர் கூறினார். பலர் தீ காயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளி யிட்டுள்ளனர்.

அந்த தொழிற்சாலை, சுவீடன், டென்மார்க், ஜெர்மனி, ரஷ்யா, ஸ்பெயின், நெதர்லாந்து, பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு ஆடை ஏற்றுமதி செய்து வருகிறது. டாக்காவில் ஆடை தயாரிக்கும் தொழிற்சாலைகள் அதிகளவில் உள்ளன. ஆடை ஏற்றுமதியில் சீனாவிற்கு அடுத்தபடியாக பங்ளாதேஷ் இரண்டாவது இடத் தில் உள்ளது. பல்வேறு நாடு களுக்கு ஆடைகளை ஏற்றுமதி செய்வதன் மூலம் நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 80% லாபத்தை ஆடை தொழிற்சாலை நிறுவனங்கள் ஈட்டித் தருகின்றன. பங்ளாதே‌ஷில் 2012 ஆம் ஆண்டு ஆடை தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 112 ஊழியர்கள் உயிரிழந்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!