இந்தோனீசியாவில் வெள்ளம், நிலச்சரிவு; எண்மர் உயிரிழப்பு

இந்தோனீசியாவின் சுலாவேசி தீவின் தென்பகுதியில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து, கரைகளை உடைத்துக்கொண்டு ஓட, ஒன்பது மாவட்டங்களில் உள்ள பல கிராமங்கள் நீரில் தத்தளிக்கின்றன. பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதில் ஜெனபோன்டோ மாவட்டத்தில் ஐவரும் கோவா மாவட்டத்தில் மூவரும் மாண்டதாக இந்தோனீசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்தது. குறைந்தது நால்வரைக் காணவில்லை. ஆயிரக்கணக்கான மக்கள் வீட்டைவிட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். இரண்டு பாலங்கள் சேதமடைந்தன. படகுகளும் உணவுப் பொருட்களும் இன்னும் தேவைப்படுவதாகப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் பேச்சாளர் கூறினார். படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!