மது இருக்கும் இடத்தை பன்றிகள் மோப்பம் பிடித்து அவற்றை அருந்திய சம்பவம் ரஷியாவில் நிகழ்ந்துள்ளது.
ரஷியாவின் சைபீரியாவில் உள்ள டையுமன் நகரத்தில் உள்ள பேரங்காடி ஒன்றுக்குள் மூன்று பன்றிகள் நுழைந்தன.
அந்தப் பன்றிகள் யாரையும் குறி வைக்காமல் மோப்பம் பிடித்தபடி நகர்ந்து சென்றன.
அதனால் அந்தப் பன்றிகளை விரட்டாமல், அங்கிருந்தோர் பன்றிகள் என்ன செய்கின்றன என்று பார்த்தனர்.
பலசரக்கு பொருட்கள் இருந்த ஒவ்வொரு பகுதியாக மோப்பம் பிடித்துக்கொண்டே உள்ளே சென்ற பன்றிகள் மதுபாட்டில்கள் இருந்த அடுக்குகளை கண்டதும், அதிலிருந்த இரண்டு மது பாட்டில்களை கீழே தள்ளிவிட்டு உடைத்தன.
பின்னர் தரையில் சிந்திய மதுவை குடிக்கத் தொடங்கின. இந்தச் சம்பவத்தைக் காட்டும் காணொளி இணையத்தில் வெகுவாகப் பரவி வருகிறது.