கேன்பரா: ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் கொரோனா வின் ஆட்டம் கட்டுக்கடங்காமல் இருப்பதால் இரண்டாவது அலையாக நாடு முழுவதும் மீண்டும் கிருமி பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அதிக மக்கள் வசிக்கும் மாநிலமான விக்டோரியாவில் ஜூலை 20ஆம் தேதி வரை அவசரநிலை நீட்டிக்கப்பட்டுள்ளது.
வீட்டுக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் பாதியாகக் குறைக்கப்பட்டு ஐவர் மட்டுமே ஒரே சமயத்தில் ஒன்றுகூட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
உணவகங்கள் மற்றும் கேளிக்கை விடுதிகளில் ஒன்றுகூடும் மக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டமும் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் கிருமிப் பரவல் தடுப்பு நடவடிக்கைள் தீவிரமாக கடைப்பிடிக்கப்படுவதால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை விக்டோரியா மாநிலத்தைத் தவிர கட்டுக்குள் இருக்கிறது.
இதுவரை நாடு முழுவதும் 7,460 பேர் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாநிலங்களுக்கு இடையிலான எல்லைகளை மூடியது, நாடு திரும்பும் குடிமக்களை தனிமைப்படுத்து வது, சமூக இடைவெளி, விரிவான கிருமிப்பரவல் சோதனை, கிருமிப் பரவும் தடங்களைக் கண்டறிதல் போன்ற நடவடிக்கைகளால் கிருமி யின் ஆட்டம் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. ஆனாலும் விக்டோரியா மாநிலத்தில் சமூக அளவில் கிருமித் தொற்று பரவுவது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இம்மாநிலத்தில் கடந்த வாரம் மொத்தம் 116 புதிய சம்பவங்கள் பதிவாகின. நாடு முழுவதும் பதிவான கிருமித் தொற்றுகளுடன் ஒப்பிடுகையில் இது 83 விழுக்காடு.
மேலும் 116ல் 87 சம்பவங்கள் சமூக அளவில் பரவியவை.
இதற்கிடையே பொருளியலை படிப்படியாகத் திறந்துவிடுவதும் மக்களைப் பணிக்குத் திரும்பச் செய்வதும் தொடர்ந்து மேற் கொள்ளப்படும் என்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறியுள்ளார். ஆனால் அப்போதைக்கு அப்போது இதில் பின்னடைவு ஏற்படக் கூடும் என்றார் அவர். இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் விக்டோரியாவில் மேலும் 16 கிருமித் தொற்று சம்பவங்கள் பதி வாகியுள்ளன.