பிலிப்பீன்சில் விபத்துக்குள்ளான ராணுவ விமானம்; குறைந்தது 45 பேர் உயிரிழப்பு

பிலிப்பீன்சின் ராணுவ விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் குறைந்தது 45 பேர் மாண்டுவிட்டனர்.

பெரும்பாலான ராணுவ வீரர்கள் உட்பட 92 பேருடன் சென்ற சி-130 ராணுவ விமானம் பிலிப்பீன்சின் சூலு மாநிலத்தில் உள்ள ஜோலோ துறைமுகத்தில் தரையிறங்கிய போது விபத்தில் சிக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது.

விமானம் விழுந்தவுடன் தீப்பற்றி எரிந்ததால் சம்பவ இடத்திலே பலர் உயிரிழந்துவிட்டனர்.

அதன் பிறகு மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து 49 பேர் மீட்கப்பட்டுள்ளதாக பிலிப்பீன்ஸ் ராணுவ தளபதி சிரிலிட்டோ சோபெஜானா உறுதிப்படுத்தினார்.மற்றவர்களை மீட்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

விமானம் ஓடுபாதையைத் தவறவிட்ட காரணத்தால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் ராணுவத் தளபதி தெரிவித்தார்.

இந்த விமானத்தில் ஐந்து ராணுவ வாகனங்களும் கொண்டு செல்லப்பட்டன.

தீவிரவாத குழுக்களின் அச்சறுத்தலைச் சமாளிக்கும் வகையில் பிலிப்பீன்ஸ் தனது ராணுவத்தை நவீனப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!