பிலிப்பீன்சின் ராணுவ விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் குறைந்தது 45 பேர் மாண்டுவிட்டனர்.
பெரும்பாலான ராணுவ வீரர்கள் உட்பட 92 பேருடன் சென்ற சி-130 ராணுவ விமானம் பிலிப்பீன்சின் சூலு மாநிலத்தில் உள்ள ஜோலோ துறைமுகத்தில் தரையிறங்கிய போது விபத்தில் சிக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது.
விமானம் விழுந்தவுடன் தீப்பற்றி எரிந்ததால் சம்பவ இடத்திலே பலர் உயிரிழந்துவிட்டனர்.
அதன் பிறகு மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து 49 பேர் மீட்கப்பட்டுள்ளதாக பிலிப்பீன்ஸ் ராணுவ தளபதி சிரிலிட்டோ சோபெஜானா உறுதிப்படுத்தினார்.மற்றவர்களை மீட்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
விமானம் ஓடுபாதையைத் தவறவிட்ட காரணத்தால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் ராணுவத் தளபதி தெரிவித்தார்.
இந்த விமானத்தில் ஐந்து ராணுவ வாகனங்களும் கொண்டு செல்லப்பட்டன.
தீவிரவாத குழுக்களின் அச்சறுத்தலைச் சமாளிக்கும் வகையில் பிலிப்பீன்ஸ் தனது ராணுவத்தை நவீனப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.