ஜகார்த்தா: இந்தோனீசியாவில் தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், சுலு, மலாங் உள்ளிட்ட இந்தோனீசியாவின் பல இடங்களில் நேற்று முதல் ஒரு வாரத்திற்கு கொவிட்-19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
25% அல்லது 30 பக்தர்
களுடன் வழிபாட்டுத் தலங்கள் மீண்டும் திறக்கப்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அது போல் உணவகங்கள் 25 விழுக்காடு, கடைத்தொகுதிகள் பாதி விழுக்காட்டு வாடிக்கையாளர்களுடன் செயல்படவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஊழியர்களை இரண்டு 'ஷிப்டு'களாக பிரித்து, தொழிற்சாலைகள் முழு திறனுடன் இயங்குவதற்கு அனுமதி உண்டு.
இதுபற்றி பேசிய இந்தோனீசிய அதிபர் ஜோகோ விடோடோ, தொற்று உறுதி செய்யப்படும் விகிதம் குறைந்துள்ளதாகவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை 27 விழுக்காடு குறைந்துள்ளதாகவும் சொன்னார்.
ஆனால், பெருமளவில் தடுப்பூசி போடப்பட்டுள்ள நாடுகளும் கொரோனா தொற்றின் அடுத்த அலையை எதிர்கொண்டு வருவதைச் சுட்டிய அவர், கிருமிப் பரவலுக்கு எதிராக மக்கள் எச்சரிக்கையுடன் இருந்து சுகாதார நெறிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
நாட்டில் தொற்றுக்கு ஆளாவோர் விகிதம் 90.4 விழுக்காடாக குறைந்துள்ளதாக குறிப்பிட்டார் கொவிட்-19 அவசரக்குழுவிற்குப் பொறுப்பு வகிக்கும் மூத்த அமைச்சர் ஒருவர்.