மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லாவின் மகன் ஜெயின் நாதெல்லா திங்கட்கிழமை (பிப்ரவரி 28) காலமானார். அவருக்கு வயது 26.
பிறக்கும்போதே பெருமூளைவாத நோயால் (cerebral palsy) பாதிக்கப்பட்டிருந்தவர் ஜெயின். அவரின் உடல்நிலை கடந்த ஓராண்டாக மோசமாக இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
மைக்ரோசாஃப்ட் நிறுவன ஊழியர்களுக்கு மின்னஞ்சல் மூலம் இந்தச் செய்தி தெரிவிக்கப்பட்டது. நாதெல்லா குடும்பத்தினர் தனிப்பட்ட முறையில் நேரத்தைச் செலவிட இடமளிக்குமாறும் பிரார்த்தனையில் அவர்களை நினைவுகூருமாறும் அந்த மின்னஞ்சலில் கேட்டுக்கொள்ளப்பட்டது.