ஷாங்காய்: சீனாவில் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது.
அங்கு இதுவரையில்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 20,472 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது.
ஷாங்காயில் மட்டும் 311 தொற்றுச் சம்பவங்களும் 16,766 அறிகுறிகளற்ற தொற்றுச் சம்பவங்களும் உறுதி செய்யப்பட்டன.
தொற்று உறுதி செய்யப்பட்டவர்களைத் தனிமைப்படுத்துவதற்காக மிகப்பெரிய தற்காலிக வசதி ஒன்று உருவாக்கப்பட்டு வருகி றது.
அனைத்துலக கண்காட்சிகள் நடத்தப்படும் இடத்தில் 40,000 பேர் வரை தனிமைப்படுத்த முடியும் என்று அதிகாரிகள் கூறினர்.
ஷாங்காய் தவிர ஜிலின் பகுதியிலும் கிருமிப் பரவல் இன்னமும் கட்டுக்குள் வரவில்லை. சென்ற மார்ச் மாதம் முதல் அந்நகரம் முடக்கநிலையில் உள்ளது.
அத்துடன் ஷாங்காயின் கிழக்குப் பகுதியை போலவே, மேற்குப் பகுதியிலும் முடக்கநிலை மறு அறிவிப்பு வரும் வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற மாநிலங்களில் இருந்து ஷாங்காய்க்கு உணவுப் பொருள்கள் வருவதாகவும் அவற்றை வீடுகளுக்குக் கொண்டு சேர்ப்பதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கு வதாகவும் ஷாங்காய் நகர துணை இயக்குநர் லியு மின் சொன்
னார்.
இதற்கிடையே, நகரத்தின் பல்வேறு குடியிருப்புப் பகுதிகளில் முகாம்களை அமைத்து கொரோனா தொற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், முகாம்கள் அமைக்கப்படாத பகுதி களில் இருப்பவர்கள் தாங்களாகவே சுய பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.