லண்டன்: அர்ஜெண்டினாவின் மறைந்த காற்பந்து நட்சத்திரம் டியாகோ மாரடோனாவின் சீருடை 9.3 மில்லியன் டாலருக்கு ($12.8 மில்லியன் வெள்ளி) ஏலம் விடப்பட்டது. விளையாட்டு நினைவுப் பொருள்களில் ஆக அதிக விலைக்கு ஏலம் போயுள்ளது இந்த சீருடை.
1986ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின்போது மாரடோனா 2 கோல்கள் போட்டார். இதில் முதல் கோலை மாரடோனா தலையால் அடிக்க முயன்றபோது பந்து அவரது கையில் பட்டு கோல் வலைக்குள் சென்றுவிட்டது. அதைக் கவனிக்காத நடுவர் கோல் என்று அறிவித்தார்.
பின்னர் அந்தக் கோலை, 'கடவுளின் கை' என்று மாரடோனா கூறினார்.
அப்போட்டியில் இங்கிலாந்து 2-1 என்ற கோல்கணக்கில் தோற்ற பிறகு, மாரடோனாவுடன் இங்கிலாந்து வீரர் ஸ்டீவ் ஹாட்ஜ் சீருடையை மாற்றிக்கொண்டார்.