ரஷ்யா நடத்திய ஏவுகணைத்
தாக்குதலில் உக்ரேனின் மத்திய பகுதியில் கடைத்தொகுதி ஒன்று உருத்தெரியாமல் அழிந்தது.
நேற்று முன்தினம் நடத்தப்பட்ட இத்தாக்குதலில் குறைந்தது 18 பேர் உயிரிழந்தனர்.
காயமுற்ற 25 பேர் மருத்துவ
மனையில் அனுமதிக்கப்பட்டதாக உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்
தனர். உக்ரேனின் லிசிசான்ஸ்க்
நகரில் நிகழ்ந்த இந்தத் தாக்கு
தலுக்கு ஐநாவும் மேற்கத்திய நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இடிபாடுகளுக்கு அடியில் மேலும் பலர் சிக்கியிருப்பதாகக் கூறிய மீட்புப் பணியாளர்கள் அவர்களைத் தேடி மீட்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
ஏறத்தாழ 36 பேரைக் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
எனவே மரண எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப் படுகிறது.
அவர்களது நிலை குறித்து எதுவும் தெரியாமல் சொல்லொண்ணா துயரில் தவிக்கும் குடும்பத்தினர், தாக்குதல் நிகழ்ந்த இடத்துக்கு அருகில் நீண்ட வரிசையில்
காத்துக்கொண்டிருப்பதாக அதிகாரிகள் கூறினர்.
இந்நிலையில், கடைத்தொகுதியைக் குறிவைத்து ரஷ்யா இரண்டு ஏவுகணைகளைப் பாய்ச்சியதாக உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி குற்றம் சாட்டினார்.
அப்போது அக்கடைத்தொகுதியில் 1,000க்கும் மேற்பட்டோர் இருந்ததாக அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே, ஜி-7 மாநாட்டில் கலந்துகொண்ட தலைவர்கள் ரஷ்யாவின் செயல் ஏற்க முடியாதது என்று சாடியுள்ளனர்.
இதற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினும் தாக்குதலுக்குக் காரணமான மற்றவர்களும் பதில் சொல்லியே ஆகவேண்டும் என்று அவர்கள் கூறினர்.