வாஷிங்டன்: முன்னாள் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் பின் வீட்டில் அணுவாயுதங்கள் தொடர்பான ஆவணங்கள் இருக்கிறதா என்று அந்நாட்டின் மத்திய புலனாய்வுத் துறை வியாழனன்று சோதனை நடத்தியது.
இதனைத் தெரிவித்த வாஷிங்டன் போஸ்ட் நாளேடு டோனல்ட் டிரம்ப்பின் பாம் பீச் கடற்கரையிலுள்ள 'மாரா லாகோ' உல்லாசத் தளத்தில் ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்பட்டனவா என்று தெரிவிக்கவில்லை.
இந்த சோதனையை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று டிரம்ப்பின் குடியரசுக் கட்சி சாடியது.
இச்சோதனையில் திரு டிரம்ப் 2021ஆம் ஆண்டில் வெள்ளை மாளிகையைவிட்டு வெளியேறிய போது சட்டத்துக்குப் புறம்பாக, நீதித்துறை ரகசியமானவை என்று வகைப்படுத்திய சில ஆவணங்களை அப்புறப்படுத்தினரா என்ற விசாரணை தொடர்பானது என்று நீதித்துறை கூறுகிறது.
முன்னாள் அமெரிக்க அதிபர் ஒருவரின் வீடு சோதனைக்குள்ளானது இதுவே முதன்முறை.