13 மணி நேரம் பறந்தபின் புறப்பட்ட இடத்திற்கே திரும்பிய விமானம்

துபாய்: கடந்த வாரம் வெள்ளிக்கிழமை காலையில் துபாயில் இருந்து நியூசிலாந்துக்குப் புறப்பட்ட விமானம், 13 மணி நேரம் வானில் பறந்த பிறகு மீண்டும் துபாயிலேயே தரையிறங்கியது.

இகே448 என்ற அந்த எமிரேட்ஸ் விமானம், துபாய் நேரப்படி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் கிளம்பியது. கிட்டத்தட்ட 4,500 மைல் தொலைவு பறந்தபின் மீண்டும் துபாய்க்கே விமானத்தைத் திருப்பிய அதன் விமானி, நள்ளிரவில் துபாயில் தரையிறக்கினார்.

கடுமையான வெள்ளம் சூழ்ந்ததால் ஆக்லாந்து விமான நிலையம் மூடப்பட்டதே இதற்குக் காரணம்.

“ஜனவரி 29 ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிவரை எந்த அனைத்துலக விமானமும் ஆக்லாந்து விமான நிலையத்தில் தரையிறங்காது,” என்று அந்த விமான நிலையம் அறிவித்திருந்தது.

அதேபோல, 29ஆம் தேதி காலை 5 மணிவரை அங்கிருந்து எந்தவோர் அனைத்துலக விமானமும் புறப்படவில்லை.

ஞாயிற்றுக்கிழமையிலிருந்து விமான நிலையம் மீண்டும் செயல்படத் தொடங்கியது. இடைவிடாத மழையால் அவ்விமான நிலையம் வெள்ளத்தால் சூழப்பட்டதால் பயணிகள் அவதியுற நேர்ந்ததைச் சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளிகள் காட்டின.
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!