மனிதரைப் பெட்டியென்று நினைத்த ரோபோ; உயிரிழந்த ஆடவர்

சோல்: இயந்திர மனிதனால் ஊழியர் ஒருவர் நசுக்கப்பட்டு இறந்துள்ளார். மனிதரையும் பெட்டியையும் அது வேறுபடுத்தத் தவறியதால் 40 வயதான அந்த ஊழியர் உயிரிழந்தார் என்று யோன்ஹாப் செய்தி நிறுவனம் புதன்கிழமை செய்தி வெளியிட்டது.

இயந்திர மனித நிறுவனம் ஒன்றின் ஊழியரான அவர், அவற்றைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார்.

குடமிளகாய் நிரப்பப்பட்ட பெட்டிகளைத் தூக்கி நகர் தட்டில் (கன்வேயர் பெல்ட்) வைத்துக்கொண்டிருந்த அந்த ரோபோ, செயலிழந்து அந்த ஊழியரையும் ஒரு பெட்டி என்று அடையாளம் கண்டுள்ளது.

அதன் கை, ஆடவரை நகர் தட்டில் தள்ளி நசுக்கியது. அதில் அவருக்கு முகம், மார்புப் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. செவ்வாய்க்கிழமை இரவு 7.45 மணியளவில் விபத்து நிகழ்ந்தது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சம்பவம் குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!